இந்தியா

“ஜே.என்.யூ துணைவேந்தரை நீக்கவேண்டும்”- குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாகச் சென்ற மாணவர்கள் கைது!

டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது, போலிஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

“ஜே.என்.யூ துணைவேந்தரை நீக்கவேண்டும்”- குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாகச் சென்ற மாணவர்கள் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் ஏராளமானோர் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது, போலிஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 5ம் தேதியன்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், பல்கலை. ஊழியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மாணவர்கள் பலர் படுகாயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி அமைப்பினர் என்பது அம்பலமானது. ஆனால், அவர்களில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. மாறாக, பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினர் மீது வழக்குகள் புனையப்பட்டுள்ளன.

“ஜே.என்.யூ துணைவேந்தரை நீக்கவேண்டும்”- குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாகச் சென்ற மாணவர்கள் கைது!

இதனைக் கண்டித்தும், ஜே.என்.யூ துணைவேந்தரை நீக்க வலியுறுத்தியும் மாணவர்கள் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர். மாண்டி ஹவுசில் தொடங்கிய இந்தப் பேரணியில் மாணவர்கள், பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தப் பேரணியை, வன்முறைத் தாக்குதலில் பலத்த காயமடைந்த ஜே.என்.யூ. மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷி கோஷ் வழிநடத்தினார்.

போலிஸார் அனுமதி மறுத்ததும், அவர்களை எதிர்த்து போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். இதையடுத்து, போலிஸார் மாணவர்களைக் கைது செய்தனர். அப்போது மாணவர்களை போலிஸார் கடுமையாகக் கையாண்ட காணொளிகளும் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட மாணவர்கள் கோனாட் பேலஸில் உள்ள காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

banner

Related Stories

Related Stories