India

#LIVE மகாராஷ்டிராவில் புதிய எம்.எல்.ஏக்களின் பதவியேற்பு விழா தொடங்கியது!!

மகராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

#LIVE மகாராஷ்டிராவில் புதிய எம்.எல்.ஏக்களின் பதவியேற்பு விழா தொடங்கியது!!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on
27 November 2019, 02:57 AM

மகாராஷ்டிராவில் புதிய எம்.எல்.ஏக்களின் பதவியேற்பு விழா தொடங்கியது!

மகாராஷ்டிர மாநில சட்டமன்றத்தேர்தலில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏக்களின் பதவியேற்பு விழா தொடங்கியது. தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள காளிதாஸ் கொலம்பகர் புதிய எம்.எல்.ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

26 November 2019, 10:52 AM

ஆளுநர் மாளிகையில் தேவேந்திர பட்நாவிஸ்!

ராஜினாமா கடிதத்தை அளிக்க மஹராஷ்டிரா ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளார் தேவேந்திர பட்நாவிஸ்

26 November 2019, 10:37 AM

ஆட்சி அமைக்க உரிமை கோரும் உத்தவ் தாக்கரே!

#LIVE மகாராஷ்டிராவில் புதிய எம்.எல்.ஏக்களின் பதவியேற்பு விழா தொடங்கியது!!

ஆளுநரை மாலை 06.30 மணிக்கு சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் உத்தவ் தாக்கரே

26 November 2019, 10:25 AM

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திர ஃபட்னாவிஸ்

26 November 2019, 09:23 AM

அஜித் பவார் ராஜினாமா!

#LIVE மகாராஷ்டிராவில் புதிய எம்.எல்.ஏக்களின் பதவியேற்பு விழா தொடங்கியது!!

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியிலிருந்து அஜித் பவார் ராஜினாமா

26 November 2019, 05:17 AM

நாளை மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு!

மகாராஷ்டிர மாநிலத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

26 November 2019, 04:14 AM

பாஜக ஆட்சிக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு!

அரசியல் சாசனத்துக்கு எதிராக மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைத்திருப்பதற்கு எதிராக சிவசேனா தொடர்ந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ளது உச்ச நீதிமன்றம்.

25 November 2019, 04:48 PM

நாங்கள் வெறும் 5 வருடத்திற்காக இங்கு வரவில்லை - உத்தவ் தாக்கரே

பின்னர் பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ''எங்களை எந்தளவுக்கு உடைக்க முயற்சிக்கிறார்களோ அந்தளவிற்கு அதிகமாக நாங்கள் ஒன்றுபடுவோம்.

நாங்கள் வெறும் 5 வருடத்திற்காக இங்கு வரவில்லை. இன்னும் பல வருடங்களுக்கு நாங்கள் மகாராஷ்டிராவை ஆட்சி செய்ய போகிறோம்'' எனத் தெரிவித்தார்.

25 November 2019, 04:47 PM

இது கோவா இல்லை, மகாராஷ்டிரா - சரத் பவார்!

கூட்டத்தில் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், கர்நாடகா, கோவா, மணிப்பூரில் பெரும்பான்மை இல்லாமல் பா.ஜ.க ஆட்சி அமைத்தார்கள்.

ஆனால், பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியமைக்க இது கோவா அல்ல மகாராஷ்டிரா. பெரும்பான்மையை நிரூபிப்பதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இருக்காது'' எனத் தெரிவித்தார்.

25 November 2019, 04:45 PM

சிவசேனா மூத்த தலைவரும் எம்.பியுமான சஞ்சய் ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில் எங்களிடம் 162 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள்” என மகாராஷ்டிர ஆளுநரைக் குறிப்பிட்டு அதிரடியாகப் பதிவிட்டு இருந்தார்.

அதன்படி, மும்பை தனியார் ஓட்டலில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 162 பேர் செய்தியாளர்கள் முன்னிலையில் தோன்றினார்கள்.

அப்போது, 162 ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் சரத் பவார், உத்தவ் தாக்கரே மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் தலைமையில், நான் எனது கட்சிக்கு நேர்மையாக இருப்பேன் என உறுதிமொழி ஏற்றனர்.

25 November 2019, 06:28 AM

நாளை காலை 10.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்!

மகாராஷ்டிரா வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் உத்தரவை நாளை காலை 10.30க்கு தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

25 November 2019, 06:27 AM

’மகாராஷ்டிராவில் நடந்திருப்பது ஜனநாயக படுகொலை’ - அபிஷேக் மனு சிங்வி வாதம்!

25 November 2019, 06:25 AM

சிவசேனா தரப்பு வாதம்!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரே ஒரு எம்.எல்.ஏ. பாஜகவிற்கு ஆதரவு வழங்குகிறேன் என கூறினால், அது கட்சியின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியுமா? - சிவசேனா தரப்பு வாதம்!

25 November 2019, 06:25 AM

ஜனநாயக மோசடி!

அஜித் பவார் அளித்த ஆதரவு கடிதத்தை அரையும்குறையுமாக நம்பி பா.ஜ.கவை ஆட்சி அமைக்க அழைத்ததன் வாயிலாக ஜனநாயக மோசடி நடைபெற்றுள்ளது - சிவசேனா வாதம்!

25 November 2019, 05:57 AM

குடியரசுத் தலைவர் ஆட்சியை அவசர அவசரமாக நீக்க இது என்ன அவசர நிலை பிரகடனமா? - கபில் சிபல் வாதம்

25 November 2019, 05:38 AM

இன்றைய தேதியில் மஹாராஷ்டிரா அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா? - பா.ஜ.க தரப்புக்கு நீதிபதி கேள்வி!

25 November 2019, 05:37 AM

மத்திய, மாநில அரசு தரப்பு வழக்கறிஞர்களிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி!

25 November 2019, 05:36 AM

நம்பிக்கை வாக்கெடுப்பு தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது.

- உச்சநீதிமன்றம்

25 November 2019, 05:36 AM

பா.ஜ.க-வுக்கு 170 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளதாக வாதம்!

"மகாராஷ்டிராவில் பா.ஜ.க அரசிற்கு 170 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது; ஆதரவுக் கடிதம் போலியானது என்று கூறுவதை ஏற்க முடியாது!"

- பா.ஜ.க தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி

25 November 2019, 05:28 AM

மத்திய அரசு தரப்பு வாதம்!

ஆளுநரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது; ஆளுநரை விரைவாக வேலை செய்ய அவசரப்படுத்த முடியாது.

- மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதம்

25 November 2019, 05:10 AM

விசாரணை துவங்கியது!

ஆளுநரின் முடிவுக்கு எதிராக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணை தொடங்கியது.

25 November 2019, 05:09 AM

முக்கிய உத்தரவு பிறப்பிக்குமா உச்சநீதிமன்றம்?

பரபரப்பான அரசியல் சூழலில் மிக முக்கியமான உத்தரவை சற்றுநேரத்தில் பிறப்பிக்கிறது, உச்சநீதிமன்றம்.

மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக சற்றுநேரத்தில் உத்தரவிடுகிறது உச்ச
நீதிமன்றம்.

25 November 2019, 05:08 AM

ஆவணங்கள் தாக்கல்!

#LIVE மகாராஷ்டிராவில் புதிய எம்.எல்.ஏக்களின் பதவியேற்பு விழா தொடங்கியது!!

ஆளுநரின் அழைப்பு கடிதங்கள் உள்ளிட்ட விவரங்கள் சீலிடப்பட்ட உறையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்!

24 November 2019, 07:19 AM

கடிதங்களை சமர்ப்பிக்க வேண்டும்!

பா.ஜ.க ஆட்சி அமைக்க ஆளுநர் அளித்த கடிதம், எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதம் ஆகியவற்றை நாளை காலை 10.30 மணிக்குள் தாக்கல் செய்யுமாறு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

24 November 2019, 07:03 AM

வழக்கு நாளை ஒத்திவைப்பு!

எந்த அடிப்படையில் ஆளுநர் பதவி ஏற்பு நடத்த உத்தரவிட்டார். அதற்கான ஆவணங்களை நாளை காலை 10.30 மணிக்குள் மத்திய மாநில அரசுகள் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு.

24 November 2019, 06:58 AM

ஆளுநர் எந்த விதமான விதியையும் பின்பற்றவில்லை. மத்திய அரசின் அழுத்தத்தால் அவர் பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்தி உள்ளார் - அபிஷேக் மனு சிங்வி

24 November 2019, 06:53 AM

23ம் தேதி அதிகாலை மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்பட்டது. அமைச்சரவை கூட்டம் நடத்தாமல் இதை செய்துள்ளனர் - கபில் சிபல்

24 November 2019, 06:30 AM

யார் கொடுத்த உத்தரவு?

“யாரோ எங்கிருந்தோ கொடுத்த உத்தரவின் பேரில் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கப்பட்டுள்ளது” என கபில் சிபல் வாதம்.

24 November 2019, 06:29 AM

கபில் சிபல் வாதம்!

மகாராஷ்டிராவில் இன்றே பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என கபில் சிபல் வாதம்.

24 November 2019, 06:29 AM

ஒருதலைப்பட்சமாக செயல்படும் ஆளுநர் - சிவசேனா தரப்பு வாதம்!

மத்திய அமைச்சரவையின் பரிந்துரை இல்லாமல் குடியரசு தலைவர் ஆட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆளுநரின் செயல்பாடு ஒருதலைப்பட்சமாக உள்ளது என சிவசேனா தரப்பு வாதம்.

24 November 2019, 06:27 AM

உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

24 November 2019, 06:25 AM

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது.

கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆஜர்!

இந்த வழக்கு விசாரணையில், சிவசேனா - காங். - என்சிபி சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி உள்ளனர். அதேபோல் மகாராஷ்டிரா அரசு சார்பாக கே.கே.வேணுகோபால் ஆஜராகி உள்ளனர். பா.ஜ.க சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகியுள்ளார்.

24 November 2019, 06:24 AM

குதிரை பேரத்தை தடுக்கும் வகையில், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று மூன்று கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தன.

24 November 2019, 06:22 AM

உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மனு!

இதையடுத்து, மகாராஷ்டிராவில் பட்னாவிஸுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங் கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.

24 November 2019, 06:21 AM

திடீர் பதவியேற்பு!

இந்நிலையில் திடீர் திருப்பமாக நேற்று காலை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஆதரவுடன், பா.ஜ.க-வின் தேவேந்திர ஃபட்னாவிஸ் மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

மகாராஷ்டிர அரசியலில் ஏற்பட்ட இந்த திடீர் திருப்பம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜ.க ஜனநாயகத்தில் கரும்புள்ளியை ஏற்படுத்திவிட்டதாக பலரும் குற்றம்சாட்டினர்.

24 November 2019, 06:18 AM

இதையடுத்து, சிவசேனா - தேசியவாத காங். - காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கூட்டணி ஆட்சி அமைக்க குறைந்தபட்ச செயல்திட்டத்தை முதலில் தனித்தனியே உருவாக்கினார்கள். அதன் பின்னர் மூன்று கட்சியின் முக்கிய தலைவர்களும் இணைந்து விவாதித்தனர்.

24 November 2019, 06:13 AM

அதிகாரப் போட்டியால் குழப்பம்!

மராட்டிய மாநிலத்தில் அக்டோபர் 21ம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் 24ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. பா.ஜ.க - சிவசேனா கூட்டாகவும், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டாகவும் தேர்தலை சந்தித்தன. பா.ஜ.க 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றன.

பா.ஜ.க-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இருந்தாலும் கூட அதிகாரத்தில் சமபங்கீட்டில் இழுபறி தொடர்ந்தது. அதன் பின்னர் மாநில அரசியலில் நேரடி அரசியல் எதிரியான சரத் பவாருடன் பேச்சுவார்த்தை தொடங்கியது சிவசேனா. சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டது.

மகாராஷ்ட்ரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி பா.ஜ.க, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த நிலையில் வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதால் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை செய்தார். மத்திய அமைச்சரவை அதற்கு ஒப்புதல் அளிக்கவே நவம்பர் 13ம் தேதி குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.

banner

Related Stories

Related Stories