இந்தியா

மோடி - ஜின்பிங் இரண்டாம் நாள் சந்திப்பில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இளம்பெண் : யார் தெரியுமா ?

மோடி ஜின் பிங் சந்திப்பின் போது இருவருக்கும் இடையேயான மொழிபெயர்ப்பாளராக இருந்தவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஐஎஃப்எஸ் அதிகாரி பிரியங்கா சோஹானி.

மோடி - ஜின்பிங் இரண்டாம் நாள் சந்திப்பில்  அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இளம்பெண் : யார் தெரியுமா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகளில் ஒன்றான மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங்கின் முறைசாரா சந்திப்பு அக்.,11 மற்றும் 12ம் தேதி நடைபெற்றது.

மோடி - ஜின்பிங் இரண்டாம் நாள் சந்திப்பில்  அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இளம்பெண் : யார் தெரியுமா ?

இந்த சந்திப்பின் போது ஜின்பிங்கும், மோடியும் மாமல்லபுரத்தில் உள்ள வரலாற்று பகுதிகளுக்குச் சென்று அதனை பார்வையிட்டபடி இருநாட்டுத் தொடர்பு குறித்துப் பேசினர். இருநாட்டுத் தலைவர்களின் இந்த சந்திப்பில் இந்தியாவைச் சேர்ந்த இரு வெளியுறவுத் துறை அதிகாரிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர்.

மோடி - ஜின்பிங் இரண்டாம் நாள் சந்திப்பில்  அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இளம்பெண் : யார் தெரியுமா ?

முதல் நாள் சந்திப்பின் போது மோடிக்கும், சீன அதிபருக்கும் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர் ஐ.எஃப்.எஸ் அதிகாரியும், சீனாவுக்கான இந்திய தூதரகத்தின் முதன்மைச் செயலாளருமான (அரசியல் பிரிவு) மது சூதன். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.

மோடி - ஜின்பிங் இரண்டாம் நாள் சந்திப்பில்  அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இளம்பெண் : யார் தெரியுமா ?

மற்றொருவர், இரண்டாம் நாள் சந்திப்பின் போது மோடி, ஜின்பிங்குடன் உடன் இருந்த இந்தியத் தூதரக அதிகாரி பிரியங்கா சோஹானி. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இவர், 2012ம் ஆண்டு குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய வெளியுறவுத் துறையில் பணிபுரிந்து வருகிறார்.

மோடி - ஜின்பிங் இரண்டாம் நாள் சந்திப்பில்  அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இளம்பெண் : யார் தெரியுமா ?

மராட்டி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வல்லவராக உள்ள பிரியங்கா, 2016ம் ஆண்டு முதல் சீனாவுக்கான இந்திய தூதரகத்தில் பணியாற்றி வருகிறார். வெறும் மூன்றே ஆண்டுகளில் சீனாவின் அதிகாரப்பூர்வ மொழியான மாண்டரினை வெகு விரைவில் கற்று அதிலும் கைதேர்ந்தவராக வலம் வருகிறார்.

மோடி - ஜின்பிங் இரண்டாம் நாள் சந்திப்பில்  அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இளம்பெண் : யார் தெரியுமா ?

இவர்தான், மாமல்லபுரத்தில் மோடி ஜின்பிங்கின் இரண்டாம் நாள் சந்திப்பில் மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டுள்ளார். சீன அதிபர் ஜின் பிங் சென்னை வந்தது முதல் அவரை வரவேற்று அவரது இந்த பயணத்துக்கான பொறுப்பு அதிகாரியாகச் செயல்பட்டுள்ளார்.

மோடி - ஜின்பிங் இரண்டாம் நாள் சந்திப்பில்  அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இளம்பெண் : யார் தெரியுமா ?

சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரக முதன்மைச் செயலாளாராக அரசியல் பிரிவில் பணியாற்றும் பிரியங்கா சோஹானி வெளி விவகாரத்துறையில் சிறந்து விளங்கியதற்கான பிமல் சன்யால் விருது மற்றும் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories