இந்தியா

செப்.,7ல் நிலவில் தரையிறங்குகிறது சந்திரயான் 2 - இஸ்ரோ அறிவிப்பு!

புவி சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி பயணத்தைத் தொடங்கிய சந்திரயான்-2 செப்டம்பர் 7ல் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

செப்.,7ல் நிலவில் தரையிறங்குகிறது சந்திரயான் 2 - இஸ்ரோ அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 செயற்கை கோளில் சந்திரயான் 2 விண்கலத்தை கடந்த மாதம் 22ம் தேதி விண்ணில் ஏவியது இஸ்ரோ.

பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இதுநாள் வரை சுற்றி வந்துக் கொண்டிருந்த சந்திரயான் 2 விண்கலம், தற்போது அதிலிருந்து விலகி நிலவை நோக்கி வெற்றிகரமான பயணத்தை கடந்த புதன் கிழமை (ஆக.,13) தொடங்கியது.

இந்த நிலையில், ஆகஸ்ட் 20ம் தேதி சந்திரயான் 2 நிலவைச் சென்று அதன் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வரும் என்றும் அதன் பின்னர் படிப்படியாக விட்டம் குறைக்கப்பட்டு செப்டம்பர் 7ம் தேதி நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய மூன்று கலன்களுடன் மொத்தம் 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான் 2, தற்போது ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து ரோவர் மற்றும் லேண்டருடன் நிலவில் தரையிறங்கும் என்றும், ஆர்பிட்டர் ஓராண்டு வரை நிலவை சுற்றி ஆய்வு நடத்தும் என கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories