இந்தியா

பீகாரில் மூளைக்காய்ச்சலுக்கு பலி எண்ணிக்கை 129 ஆக உயர்ந்தது!

மூளைக்காய்ச்சல் பாதிப்பால் பீகார் மாநிலத்தில் இதுவரை 129 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் மூளைக்காய்ச்சலுக்கு பலி எண்ணிக்கை 129 ஆக உயர்ந்தது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் மற்றும் கயா ஆகிய பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மற்றும் ஜப்பான் என்சபிலிட்டிஸ் என்ற இரு வகையான மூளைக்காய்ச்சல் பரவி வருகிறது.

இந்த மூளைக்காய்ச்சலால் ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பீகாரில் மூளைக்காய்ச்சலுக்கு பலி எண்ணிக்கை 129 ஆக உயர்ந்தது!

தற்போது இந்த மூளைக்காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பீகாரில் குழந்தைகளின் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. மேலும், சிகிச்சை அனுமதிக்கப்பட்டிருக்கும் பல்வேறு குழந்தைகளின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த நிலையில், முசாபர்பூரில் மட்டும் அரசு மருத்துவமனையில் 109 பேரும் கெஜ்ரிவால் அரசு மருத்துவமனையில் 20 பேரும் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories