இந்தியா

"யோகி ஆதித்யநாத் முட்டாள் போல் செயல்படுகிறார்" பத்திரிகையாளர் கைதுக்கு ராகுல் கண்டனம்

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் முட்டாள்தனமாக செயல்படுகிறார் என பத்திரிக்கையாளர் கைது நடவடிக்கைக்கு ராகுல் காந்தி கடும் கண்டம் தெரிவித்துள்ளனர்.

"யோகி ஆதித்யநாத் முட்டாள் போல் செயல்படுகிறார்" பத்திரிகையாளர் கைதுக்கு ராகுல் கண்டனம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பெண் ஒருவர் விமர்சித்த விடியோ ஒன்றை டெல்லியைச் சேர்ந்த தொலைக்காட்சி செய்தியாளர் பிரசாந்த் கனோஜியா சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். முதல்வர் மீது பொய்யான தகவலைப் பரப்புவதாகக் கூறி செய்தியாளரையும், ஆதித்யநாத்தை விமரிசித்த பெண்ணையும் சனிக்கிழமை லக்னோ காவல்துறை கைது செய்தது. பின்னர் டெல்லி நொய்டாவில் இயங்கிவந்த உள்ளூர் தொலைக்காட்சி அலுவலகத்திற்கும் சீல்வைத்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளரின் மனைவி உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பாக வழக்கறிஞர் முறையிட்டார். அதன்டிப்படையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, நீதிபதிகள் சரமாரியாக கேள்வியெழுப்பினார்.

”கருத்துவேறுபாடு இருக்கலாம் அதற்காக கைது நடவடிக்கையா? எந்த அடிப்படையில் பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை கைது செய்தீர்கள்?” என கைது நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. ”அவர் கொலைக் குற்றம் செய்துவிட்டாரா; ஒரு அவதூறு வழக்கிற்காக நீதிமன்ற காவலில் வைக்க அவசியம் என்ன?” என கேள்வி எழுப்பினார்.

மேலும் இதுகுறித்து ராகுல் காந்தி டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, "என்னை பற்றி அவதுறாக செய்தி வெளியிடுவோரை சிறையில் அடைப்பதாக இருந்தால் பல செய்தி நாளிதழ்கள் மற்றும் செய்தி தொலைக்காட்சிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும். உத்தரபிரதேச முதல்வர் முட்டாள்தனமாக செயல்படுகிறார், கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்களை விடுவிக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கைது நடவடிக்கையானது சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது என காங்கிரஸ் தொடர்ந்து, தெரிவித்து வந்தது. மேலும் உ.பி முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்களும் எழுந்துள்ளது. பத்திரிகைச் சுதந்திரத்தின் மீது தாக்குதல் நடத்தும் வேலையை பா.ஜ.க தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories