இந்தியா

ரமலான் பண்டிகை: நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் உற்சாக கொண்டாட்டம்!

ஈகைத் திருநாளாம் ரமலான் பண்டிகை தமிழகம், புதுச்சேரி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது

 ரமலான் பண்டிகை: நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் உற்சாக கொண்டாட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இஸ்லாமியர்களில் 5 முக்கிய கடமைகளின் ஒன்றான ரமலான் நோன்பு கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கியது.

வானில் பிறை தென்பட்டதால் மத்திய கிழக்கு நாடுகளாக சவுதி, கத்தார் போன்ற அரபு நாடுகளில் நேற்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனையடுத்து, நேற்று மாலை தமிழகத்தின் பிறை தெரிந்ததால் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் ஈகை பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.

 ரமலான் பண்டிகை: நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் உற்சாக கொண்டாட்டம்!

இதனையொட்டி, காலை முதலே இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். சென்னை திருவல்லிக்கேணியில் இன்று காலை நடந்த சிறப்பு தொழுகையில் வாழ்த்துகளையும் அன்பையும் பரிமாறிக்கொண்டனர்.

 ரமலான் பண்டிகை: நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் உற்சாக கொண்டாட்டம்!

இதேப்போல், நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை செய்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாழ்த்து தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories