இந்தியா

அசாமில் இந்திய விமானப்படை விமானம் மாயம் : தேடும் பணி தீவிரம் !

அசாமில் இருந்து 13 பேருடன் சென்ற இந்திய விமானப்படை விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

அசாமில் இந்திய விமானப்படை விமானம் மாயம் : தேடும் பணி தீவிரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

அசாம் மாநிலம் ஜோர்கத் விமானப்படை தளத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் மெஞ்சுகா பகுதியை நோக்கி இந்திய விமானப்படையின் ஏஎன்-32 ரக விமானம் இன்று புறப்பட்டுச் சென்றது. அதில் 8 ஊழியர்கள் மற்றும் 5 பயணிகள் என மொத்தம் 13 பேர் பயணம் செய்தனர்.

மதியம் 12.25 மணிக்கு புறப்பட்ட விமானம் 2 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் மெஞ்சுகா விமானப்படை தளத்தை அடையவில்லை. விமானத்துடனான தரைக் கட்டுப்பாட்டு நிலைய தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். சுகோய்-30 மற்றும் சி130 சிறப்பு விமானம் ஆகியவற்றில் சென்று தேடும் பணி நடைபெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories