இந்தியா

தீவிரவாதிகள் தாக்குதலில் அருணாச்சலப் பிரதேச எம்.எல்.ஏ. உள்பட 7 பேர் பலி !

அருணாச்சலப் பிரதேசம் மேற்கு கோன்சா பகுதியில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. திரோங் அபோ உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

தீவிரவாதிகள் தாக்குதலில் அருணாச்சலப் பிரதேச எம்.எல்.ஏ. உள்பட 7 பேர் பலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

அருணாசலப் பிரதேச மாநிலத்தின் மேற்கு கோன்சா பகுதியில் உள்ள திரப் மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.வான திரோங் அபோ மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு மேகாலயா மாநில முதல்வர் கன்ராட் சங்மா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.மேலும் இந்த சம்பவம் குறித்து உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அருணாசலப்பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மேற்கு கோன்சா பகுதியில் திரோங் அபோ போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories