இந்தியா

இந்திய விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்:உளவுத்துறை எச்சரிக்கை!

இந்திய விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்:உளவுத்துறை எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கடந்த பிப்ரவரி மாதம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இந்நிலையில், அங்கு மீண்டும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை உறுதிபடுத்தும் விதமாக ஸ்ரீநகர், அவந்திபுராவில் தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகி வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதனால், விமானப்படை தளத்திற்குள்ளும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்துமாறு உளவுத்துறை அறிவுறுத்தி உள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories