இந்தியா

நாடு முழுவதும் ஓய்ந்தது தேர்தல் பிரசாரம்!

நாடு முழுவதும் ஏழாவது கட்ட மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஒய்ந்தது.

நாடு முழுவதும் ஓய்ந்தது தேர்தல் பிரசாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நாடு முழுவதும் ஏழாவது கட்ட மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஒய்ந்தது.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி 6 கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில் மீதமுள்ள 59 தொகுதிகளுக்கான 7-ம் கட்டத் தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது.

கடைசி கட்ட தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. தமிழகத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் மே 19-ம் தேதி நடக்கிறது. இதற்கான பிரசாரமும் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

நான்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories