இந்தியா

அசாமின் ஹைலகண்டிக்கு நாளை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

ஹைலகண்டி என்ற நகரில் நேற்று இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு ஊரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

அசாமின் ஹைலகண்டிக்கு நாளை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அசாம் மாநிலத்தில் உள்ள ஹைலகண்டி நகரில் நேற்று (மே 10) காளிபிரி என்ற பகுதியில் ஒரு தரப்பு, பள்ளிவாசல் முன்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். இதனை எதிர்த்து மற்றொரு பிரிவு மறியலில் ஈடுபட்டது.

இதனையடுத்து, இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இந்த மோதலில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மூவரில் ஒருவர் உயிரிழந்தார்.

அசாமின் ஹைலகண்டிக்கு நாளை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றமும் பரபரப்பும் நீடித்ததால் நேற்று மாலை 6 மணியில் இருந்து நாளை (மே12) இரவு 7 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அசாமின் ஹைலகண்டிக்கு நாளை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

இது குறித்து பேசிய ஹைலகண்டி காவல்துறை துணை ஆணையர் கீர்த்தி, வன்முறை ஏற்பட்டதன் காரணமாக இன்னும் பதற்றம் தனியாததால், ராணுவ பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும், மோதல் போக்கில் ஈடுபட்டவர்கள் எவரை காவல்துறை இதுவரை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories