இந்தியா

மக்களவை தேர்தல் : வாக்குப்பதிவு நேரத்தில் மாற்றமா?உச்சநீதிமன்றத்தில் வழக்கு 

ரம்சான் மற்றும் கடும் வெப்பத்தைக் கருத்தில் கொண்டு அடுத்த மூன்று கட்ட வாக்குப் பதிவை காலை 5.30 மணிக்கு தொடங்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வழக்கு.

மக்களவை தேர்தல் : வாக்குப்பதிவு நேரத்தில் மாற்றமா?உச்சநீதிமன்றத்தில் வழக்கு 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

வழக்கறிஞர் மீனாட்சி அரோரா இன்று தலைமை நீதிபதி முன்பாக ஆஜராகி, வரும் 6 ஆம் தேதி முதல் ரம்சான் நோன்பு காலம் தொடங்க உள்ளதாகவும், அடுத்த ஒரு மாதத்துக்கு கடும் வெப்பம் நிலவும் என்று வானிலை மையம் எச்சரித்திருப்பதையும் கருத்தில் கொண்டு வாக்குபதிவு நேரத்தை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

காலை 7 மணிக்குப் பதிலாக இரண்டு மணி நேரம் முன்னதாக காலை 5 அல்லது 5.30 மணிக்கு தொடங்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு ஏழு மணிக்கு முன்னதாகவே வாக்குப்பதிவை தொடங்குவது குறித்து பரிசீலிக்கும் படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories