இந்தியா

விசாரணை குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகல் ! 

நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரித்து வரும் குழுவில் இருந்து நீதிபதி ரமணா விலகல்.

விசாரணை குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகல் ! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது அவரது அலுவலகத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், பாலியல் அத்துமீறல் புகார் அளித்தார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் ஊழியர் கொடுத்த பாலியல் புகார் குறித்து விசாரித்த மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, என்.வி.ரமணா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

விசாரணை குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகல் ! 

நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரித்து வரும் குழுவில் இருந்து நீதிபதி ரமணா விலகுவதாக தெரிவித்தார். மேலும் விசாரணை குழுவில் இருந்து விலகுவதாக நீதிமன்ற பதிவாளருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா கடிதம் அனுப்பியுள்ளார்.ரமணா தலைமை நீதிபதியின் நண்பர் என்பதால் உரிய விசாரணை நடைபெற வாய்பில்லை என்று தனது எதிர்ப்பை தெரிவித்து நேற்று அந்தப் பெண் கடிதம் எழதியதைத் தொடர்ந்து ரமணா விலகியுள்ளார்.

banner

Related Stories

Related Stories