இந்தியா

ராகுல் காந்தியின் வேட்பு மனு அமேதியில் ஏற்பு!

உத்தர பிரதேச மாநில அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்கப்பட்டது.

ராகுல் காந்தியின் வேட்பு மனு அமேதியில் ஏற்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியில் இந்த முறையும் உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் போட்டியிடுகிறார். மே 6ம் தேதி நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

இதனையடுத்து வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த ஏப்.,20 அன்று நடைபெற்றது. அதில் ராகுல் காந்தியிம் குடியுரிமை குறித்து சுயேட்சை வேட்பாளர்கள் சிலர் குழப்பம் ஏற்படுத்தினர். அதனால், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ராகுல் காந்தியின் வழக்கறிஞர் அளித்த விளக்கத்தை ஏற்று அமேதி தொகுதிக்கான ராகுல் காந்தியின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.

இதற்கிடையில், அமேதி தொகுதி மட்டுமில்லாமல் கேரளாவின் வயநாடு மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அதற்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்.,23) நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories