இந்தியா

கழுத்து நெரித்த கடன் - விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துகிறது ஜெட் ஏர்வேஸ்

மொத்தமுள்ள 124 விமானங்களையும் இயக்குவதை இன்று இரவோடு நிறுத்த ஜெட் ஏர்வேஸ் முடிவு செய்துள்ளது

கழுத்து நெரித்த கடன் - விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துகிறது ஜெட் ஏர்வேஸ்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கடனில் மூழ்கியுள்ள ஜெட் விமான நிறுவனம் விமானங்களை இயக்குவதை இன்று இரவோடு தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளது. இதனால் விமானக் கட்டணங்கள் உயர்துள்ளன.

ஏற்கனவே கடன் காரணமாக தத்தளித்து வரும் ஜெட் விமான நிறுவனம் தொடர்ந்து விமாங்களை இயக்க 400 கோடி ரூ கடன் வழங்க வேண்டும் என்று வங்கிகளை அணுகியது. வங்கிகள் கடன் வழங்க மறுத்துவிட்டது. மத்திய அரசும் உதவ முன் வரவில்லை.

இதனால் மொத்தமுள்ள 124 விமானங்களையும் இயக்குவதை இன்று இரவோடு நிறுத்த முடிவு செய்துள்ளதாக அதன் தலைமை அதிகாரி வினய் தூபே கூறியுள்ளார்.

இதனிடையே அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் நாளை டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளனர்.

banner

Related Stories

Related Stories