இந்தியா

இந்தியாவில் செய்திகளைப் பார்க்க ஸ்மார்ட்போனை பயன்படுத்துகின்றனர்

இந்தியாவில் அதிகளவில் மக்கள் செய்திகளை அறிந்து கொள்ள மொபைல் போன் பயன்படுத்தி வருவது ராய்டர்ஸ் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் செய்திகளைப் பார்க்க ஸ்மார்ட்போனை பயன்படுத்துகின்றனர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்தியாவில் அதிகளவில் மக்கள் செய்திகளை அறிந்து கொள்ள மொபைல் போன் பயன்படுத்தி வருவது ராய்டர்ஸ் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவின் எதிர்காலம் செய்திகளை அறிந்து கொள்ள மொபைல் போனை நம்பித்தான் இருக்கிறது என்ற நிலையில் உள்ளது.ராய்டர்ஸ் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இந்தியாவில் செய்தி வாசிப்பாளர்கள் தொடர்பாக நடத்திய ஆய்வில் தெரிய வந்திருப்பதாவது:

செய்திகளுக்காக 68 சதவீதம் மக்கள் அதிகளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வருகின்றனர். 32 சதவீதம் மக்கள் தேடுதல் மூலமும், 24 சதவீதம் மக்கள் சமூக வலைதளங்கள் மூலமும், 18 சதவீத மக்கள் நேரடியாகவும் செய்திகளைப் பெறுகின்றனர். நேரடியாக செய்திகளை ஆன் லைனில் பெறுவதன் மூலம் தாங்கள் பிரச்னைக்கு உள்ளாக்கப்படுவார்களோ என்று அஞ்சுகின்றனர்.57 சதவீதம் பேர் தவறான தகவல் என்றும், 51 சதவீதம் பேர் பெரிதுபடுத்தப்பட்டதகவல் என்றும், 51 சதவீதம் பேர் பொறுப்பற்ற செயல்பாடு என்றும் கருதுகின்றனர்.

இந்தியாவில் செய்திகளைப் பார்க்க ஸ்மார்ட்போனை பயன்படுத்துகின்றனர்

பிரேசில், துருக்கியை விட இந்தியாவில் செய்திகளைப் பார்க்க அதிகளவில் ஸ்மார்ட்போனை பயன்படுத்துகின்றனர். உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டும், மக்களின் எவ்வாறு செய்திகளை வாசிக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள ராய்டர்ஸ் இந்த ஆய்வை மேற்கொண்டு இருந்தது. ஆன்லைனில் அரசியல் செய்திகளைப் படிப்பது உறவுகளைப் பாதிக்கும் என்று49% பேரும், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் உறவை பாதிக்கும் என்று 50% பேரும், ஆன்லைனில் செய்திகளைப் படிப்பது தங்களை அதிகாரிகளிடம் சிக்க வைக்கும் என்று 55% பேரும் நம்புகின்றனர். 36% பேர் மட்டுமே இந்த செய்திகளை உண்மையானது என்று நம்புகின்றனர். பிரேசில் மற்றும் துருக்கியுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகும். மேலும், 57% பேர் போனில் வரும் செய்திகள் உண்மையா, பொய்யானவையா என்று அறியாமல் முடியாமல் இருப்பதாக் தெரிவித்துள்ளனர்.

35 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளம் மூலமாக 56 சதவீதமும், பிரிண்ட் மீடியா மூலமாக 16 சதவீதம் பேரும் பயன்படுத்துகின்றனர். மேலும், 35 வயதுக்கு மேற்பட்டோர் ஆன்லைன் மற்றும் ஆஃப்-லைன் மீடியாவை பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் வாட்ஸ் அப் பயன்பாடு மூலமாக கிட்டத்தட்ட 82 சதவீதம் பேர் செய்திகளை அறிந்து கொள்கின்றனர். மேலும், 75 சதவீதம் பேர் ஃபேஸ்புக் மூலம் தகவல்களை தெரிந்து கொள்கின்றனர். மேலும், இதில் 52 சதவீதம் பேர் செய்திகளுக்காக இரண்டையும் பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவில் செய்திகளைப் பார்க்க ஸ்மார்ட்போனை பயன்படுத்துகின்றனர்

செய்திகளை உண்மை என்று 36 சதவீதம் பேர் மட்டுமே நம்புகின்றனர். தேடுதல் மூலமாக செய்திகளை உண்மை என்று நம்புவதில் 45 சதவீதம் பேரும், 34 சதவீதம் பேர் சமூக வலைதளம் மூலமாக வருவதையே நம்புகின்றனர். 39 சதவீதம் பேர் தங்களுக்கு தெரிந்த செய்திகளை உண்மை என்று நம்புகின்றனர்.

ஸ்மாட்ர்போனில் தேடுதலை விட ஆன்லைன் செய்தி மற்றும் வீடியோக்களுக்கு 12 சதவீதம் பேர் மொபைல் அலர்ட் வசதியை பயன்படுத்துகின்றனர். இதில், வருட சந்தா செலுத்துவதற்கு 31 சதவீதம் பேர் விரும்புகின்றனர். மேலும், 9 சதவீதம் பேர் ரொம்பவே விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories