தேர்தல் 2024

“பாஜக - அதிமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்” : தேர்தல் பரப்புரையில் அமைச்சர் உதயநிதி ஆவேச பேச்சு !

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் 1 கோடியே 16 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“பாஜக - அதிமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்” : தேர்தல் பரப்புரையில் அமைச்சர் உதயநிதி ஆவேச பேச்சு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு அருகில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது கூடி இருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன் உரையாற்றிய அவர் உங்களுடைய எழுச்சியும் ஆர்வத்தையும் பார்க்கும் போது உதயசூரியன் சின்னத்தில் நிற்கும் வேட்பாளர் மலையரசன் அவர்களை பெறுவாரியாக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். ஏப்ரல் 19ஆம் தேதி வாக்கு செலுத்தி மோடியின் தலையில் குட்டு வைப்பீர்களா என பொதுமக்களிடம் கேட்டார்.

“பாஜக - அதிமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்” : தேர்தல் பரப்புரையில் அமைச்சர் உதயநிதி ஆவேச பேச்சு !

2019 மக்களவைத் தேர்தலில் கௌதம சிகாமணி அவர்களை 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் இந்த தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால் இந்த முறை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு அருகில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது கூடி இருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன் உரையாற்றிய அவர் உங்களுடைய எழுச்சியும் ஆர்வத்தையும் பார்க்கும் போது உதயசூரியன் சின்னத்தில் நிற்கும் வேட்பாளர் மலையரசன் அவர்களை பெறுவாரியாக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். ஏப்ரல் 19ஆம் தேதி வாக்கு செலுத்தி மோடியின் தலையில் குட்டு வைப்பீர்களா என பொதுமக்களிடம் கேட்டார்.

“பாஜக - அதிமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்” : தேர்தல் பரப்புரையில் அமைச்சர் உதயநிதி ஆவேச பேச்சு !

2019 மக்களவைத் தேர்தலில் கௌதம சிகாமணி அவர்களை 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் இந்த தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால் இந்த முறை குறைந்தது 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மலையரசன் அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் மூன்று வருடத்தில் செய்யப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டர். திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி நான்கு வழி சாலையாக அமைக்கப்பட்டுள்ளது உளுந்தூர்பேட்டையில் ரூபாய் 2000 கோடி மதிப்பீட்டில் அமைந்துள்ள காலனி உற்பத்தி தொழிற்சாலை மூலம் இந்த பகுதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரிஷிவந்தியம் மற்றும் நயினார் பாளையத்தில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

“பாஜக - அதிமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்” : தேர்தல் பரப்புரையில் அமைச்சர் உதயநிதி ஆவேச பேச்சு !

திருக்கோவிலூர் பகுதிக்கு உட்பட்ட ஆளுர் மற்றும் பூவனூரில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று குறுகிய காலத்தில் 53 ஆயிரம் பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குறுதிகளையும் பட்டியலிட்டார். கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய ரிங் ரோடு முடிக்கப்படும். ரிஷிவந்தியம் பகுதியில் புதிய அரசு பொறியியல் கல்லூரி திறக்கப்படும். பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கள்ளக்குறிச்சி நகரத்தின் மத்தியில் ரயில் நிலையம் அமைக்கப்படும்.

“பாஜக - அதிமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்” : தேர்தல் பரப்புரையில் அமைச்சர் உதயநிதி ஆவேச பேச்சு !

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது நாம் நிறைவேற்றிய திட்டங்களை பட்டியலிட்டர். நாம் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் சட்டமன்ற தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதியை அனைத்தும் நிறைவேற்றியுள்ளோம். அதில் 4 திட்டங்களை சுருக்கமாக தெரிவித்த அவர் கட்டணம் இல்லா பேருந்தின் மூலம் 465 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் 6 கோடி பெண்கள் கட்டணமில்லா பேருந்தில் பயணம் செய்துள்ளீர்கள். இதனால் மாதம் ரூபாய் 800 முதல் 900 முறை பெண்கள் சேமித்து வருகின்றனர்.

காலை உணவு திட்டம் 18 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகிறார்கள், இந்த திட்டத்தை கர்நாடகா தெலுங்கானா மட்டுமல்ல கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் லுடோ அவர்கள் கனடாவில் அமல்படுத்தியுள்ளார். இந்திய நாட்டில் மட்டும் இல்ல உலகத்தில் உள்ள அனைத்து நாட்டு மக்களுக்கும் எடுத்துக்காட்டாக நம்முடைய திராவிட மாடல் அரசின் திட்டம் இருந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் 54,000 குழந்தைகள் காலை உணவு திட்டத்தில் பயன் பெற்று வருகின்றனர்.

“பாஜக - அதிமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்” : தேர்தல் பரப்புரையில் அமைச்சர் உதயநிதி ஆவேச பேச்சு !

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் 1 கோடியே 16 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இதில் சில சில குறைபாடுகள் இருந்தாலும் தேர்தல் முடிந்த பிறகு அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றார்.

புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக ஏராளமான பெண் பிள்ளைகள் கல்லூரியில் சேர்ந்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் 4 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.

நாம் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் கொரோனா காலத்தில் கோவிட் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய ஒரே அரசு தமிழ்நாடு அரசு. கோவையில் கோவிட் பெருந்தொற்று காலத்தில் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை நேரில் சந்தித்த ஒரே முதலமைச்சர் நம் தமிழ்நாடு முதலமைச்சர் தான் என்றார். நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சியில் தான் வந்தது கூட இருந்தது திமுக கூட்டணி என்று. ஆமாம் 2010ல் நீட் தேர்வு இந்தியா முழுவதும் வந்தது ஆனால் தமிழ்நாட்டில் வரவில்லை ஏனென்றால் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தார்கள். நீட் தேர்வு எங்களுக்கு தேவையில்லை பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் போதும் எனக் கூறினார். எனவே நுழைவு தேர்வை ரத்து செய்தார் கலைஞர்.

“பாஜக - அதிமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்” : தேர்தல் பரப்புரையில் அமைச்சர் உதயநிதி ஆவேச பேச்சு !

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு வரவில்லை. ஆனால் ஜெயலலிதா மறைந்த பிறகு இந்த அடிமை அதிமுக கூட்டத்தை வைத்து தமிழ்நாட்டில் நீட் தேர்வு கொண்டு வந்து அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா இறந்தார். அனிதாவில் ஆரம்பித்து சென்னையில் ஜெகதீசன் என்ற மாணவர் வரை 22 மாணவர்கள் இறந்துள்ளனர். இறுதியாக ஜெகதீசனின் தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். 22 குழந்தைகளின் இல்லத்திற்கும் நேரில் சென்றது நான் மட்டும் தான். அந்த உரிமையில் தான் நீட் தேர்வு வேண்டாம் என போராட்டம் செய்து வருகிறோம்.

ஒன்றிய அமைச்சர் மோடி தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் வேட்டி சட்டை அணிந்து ஆவாரம் பேசுவது திருக்குறளா இல்லையா என்பதை யாருக்கும் தெரியாது. அவர் தமிழ் வளர்ச்சிக்கு மற்றும் ஆராய்ச்சிக்கு 5 வருடத்தில் இதுவரை ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. ஆனால் ஹிந்தி மட்டும் சமஸ்கிருதம் வளர்ச்சிக்கு 1500 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார். இதுதான் அவர் தமிழ்நாட்டுக்கு செய்யக்கூடிய துரோகம். இதையெல்லாம் அதிமுக தட்டி கேட்டதா என கேள்வி எழுப்பினார்.

“பாஜக - அதிமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்” : தேர்தல் பரப்புரையில் அமைச்சர் உதயநிதி ஆவேச பேச்சு !

எடப்பாடி பழனிச்சாமி உதயநிதி ஸ்கிரிப்ட் மாற்றி பேச வேண்டும் என தெரிவித்தார். நானாவது கல்லை காமித்தேன் இங்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் போது ஒருவர் பல்லை காட்டிக் கொண்டிருக்கிறார் பாருங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி நரேந்திர மோடியுடன் எடுத்த புகைப்படத்தை காண்பித்தார். தலைவர் அவர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு பெயர் வைத்துள்ளார், பாதம் தாங்கி பழனிச்சாமி என்று சசிகலா காலில் விழுந்து வணங்கிய புகைப்படத்தை காண்பித்தார்.உங்களைப்போல் நேரத்தை தகுந்தது போல் ஆளைத் தகுந்தார் போல் ஸ்கிரிப்ட் வைத்து பேசுபவன் நான் அல்ல என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு பதில் அளித்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் வரை நான் கல்லை காட்டிக் கொண்டே தான் இருப்பேன் என்றார். தமிழ்நாட்டிற்கு அடிக்கல் நாட்டிய போது தான் ஐந்து மாநிலங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. அங்கெல்லாம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு முடிந்தது. தமிழ்நாட்டில் கூட ஆட்சிக்கு வந்து இரண்டே வருடத்தில் கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை கட்டி முடித்தோம்.

கடந்த 9 வருடத்தில் அனைத்து மாநில உரிமைகளையும் இழந்துள்ளோம். முக்கியமாக மொழியுரிமை. மோடி பத்து நாள் மட்டுமல்ல தமிழ்நாட்டிலேயே தங்கியிருந்தாலும் கூட ஒரு இடத்தில் கூட ஜெயிக்க முடியாது என தெரிவித்தார். கடந்த 10 வருடத்தில் இந்தியாவை ஆண்டதில் ஏதாவது செய்தாரா என கேள்வி எழுப்பிய அவர் 2016 ஆம் ஆண்டு நடுராத்திரி எழுந்து என்ன பண்ணுவது என்று தெரியாமல் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். லட்சக்கணக்கானோர் ஏடிஎம் வாசலில் நின்று இறந்தனர். ஏன் என்று கேட்டால் கருப்பு பணத்தை ஒழித்து புதிய இந்தியா பிறக்கும் என்றார். அனைவரின் வங்கி கணக்கிலும் கருப்பு பணமான 15 லட்சம் செலுத்தப்படும் என தெரிவித்தார். ஆனால் 15 பைசா கூட ஒருவர் வங்கியிலும் போடவில்லை என்றார்.

தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயல் வந்தது அப்போதெல்லாம் மோடி எட்டிப் பார்க்கவில்லை. அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிதி அளித்தார். ஒன்றிய அரசிடம் நிதி கேட்டதற்கு நிதி அமைச்சர் வந்து பார்வையிட்டு சென்றார் ஆனால் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். 6.30 லட்சம் கோடி ரூபாய் ஒரு வருடத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து வரியாக வழங்குகிறோம் ஆனால் நமக்கு ஒன்னே முக்கால் லட்சம் கோடி மட்டுமே திருப்பி வழங்குகிறார்கள். அதாவது ஒரு ரூபாய் தமிழ் நாட்டு மக்கள் வரியாக கொடுத்தால் 29 பைசா மட்டுமே நமக்கு திருப்பி தருகிறார்கள் என்றார். அதனால்தான் மிஸ்டர் 29 பைசா மோடி அவர்களை அழைக்க வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்று ஒன்றை அரசிடம் கேட்டால் பழனிச்சாமிக்கு கோபம் வருகிறது.

“பாஜக - அதிமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்” : தேர்தல் பரப்புரையில் அமைச்சர் உதயநிதி ஆவேச பேச்சு !

தாங்கள் ஒன்றிய பிரதமரை இவ்வளவு கேள்வி கேட்டு விமர்சனம் செய்கிறோம் இதுவரை பதில் வரவில்லை. ஆனால் அதிமுக இதுவரை பிஜேபியிடம் ஒரு கேள்வியாவது கேட்டுள்ளாரா என கேள்வி எழுப்பினார். நான் பேசியது தான் பேசுவேன் ஏனென்றால் எங்கள் கொள்கையை மட்டுமே பேசுவேன், எங்களுக்கு சி ஏ சட்டம் வேண்டாம் என்று தான் பேசுவேன், எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்று தான் பேசுவேன், எங்களுக்கு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தான் பேசுவேன் எங்களின் மாநில உரிமையை வேண்டும் என்று தான் பேசுவேன். உங்களைப்போல் பச்சோந்தியாக நிறம் மாறி இடத்திற்கு தகுந்த மாதிரி பேச மாட்டேன் என்றார்.

தமிழ்நாட்டிலும் ஒருவர் இருக்கிறார் ஆடுற்கு தாடி எதற்கு என்று பேரறிஞர் அண்ணா கூறியது நினைவுக்கு வருவதாக தெரிவித்தார். அவர் ஆர்.என்.ரவி அல்ல ஆர்.எஸ்.எஸ்.ரவி என்றார். சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு எழுதிக் கொடுத்ததை படிக்க மாட்டார் பெரியார் அண்ணா பெயரை படிக்க மாட்டார். அதனால்தான் நம் முதலமைச்சர் நீங்கள் பேசியது அவை குறிப்பில் ஏறாது என தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் தேசிய கீதம் பாடினால் போதும் தமிழ் தாய் வாழ்த்து பாட தேவையில்லை என்று கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கூறுகிறார் ஆளுநர். தமிழ்நாடு பெயரையே மாற்ற வேண்டும் என வாய் வந்த படி உளறிக் கொண்டிருக்கிறார். இந்திய கண்ட வரலாற்றிலேயே உச்ச நீதிமன்ற நீதிபதி ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தது இதுவே முதல்முறை என்று கூறினார்.

ஒன்றிய பாரத ஜனதா அரசின் ஊழல்களை பட்டியலிட்டு பேசிய அவர் சிஏஜி அமைப்பு ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை வெளியிடுவார்கள். ஒன்றிய அரசு செலவு செய்த கணக்கில் ஏழரை லட்சம் கோடி கணக்கில் இல்லாமல் உள்ளதாக தெரிவித்துள்ளது. துவாரகா சாலை திட்டத்தில் ஒரு கிலோமீட்டர் சாலை இடுவதற்கு 250 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். மருத்துவ காப்பீடு திட்டத்தில் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு மருத்துவ காப்பீடு திட்டம் கொடுத்து உள்ளனர். இந்த 10 வருட ஆட்சியில் பாரதிய ஜனதா பல லட்சம் கோடி ஊழல் செய்துள்ளது.

இதற்கெல்லாம் பாடம் புகட்ட வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி உங்களுடைய வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அடுத்த 9 நாட்கள் இந்த பிரச்சாரத்தை மக்களிடம் வீடு வீடாக சென்று நீங்கள் தான் கொண்டு சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இவர்களுக்கு எல்லாம் பாடம் புகட்ட ஜூன் மூன்றாம் தேதி முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள், ஜூன் நான்காம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாள். அவரின் இந்த 100ம் ஆண்டு நூற்றாண்டு விழாவில் அவருக்கு தேர்தல் வெற்றியை பரிசாக நாம் எல்லோரும் கொடுப்போம் என்றார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் ஏ.வ.வேலு, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன், வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன், மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், தோழமை இயக்கங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

banner

Related Stories

Related Stories