தி.மு.க

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு; மாவட்ட வாரியாக நேர்காணல் - திருவிழாக் கோலம் பூண்டிருக்கும் அறிவாலயம்!

நாளை (மார்ச் 2) முதல் மார்ச் 6ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக விருப்ப மனு அளித்தவர்களைச் சந்தித்து தொகுதி நிலவரம் - வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராயவிருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு; மாவட்ட வாரியாக நேர்காணல் - திருவிழாக் கோலம் பூண்டிருக்கும் அறிவாலயம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையகமான அண்ணா அறிவாலயம் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

தமிழ்நாடு- புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பி தலைமைக் கழகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடத்தவுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

நாளை (மார்ச் 2) முதல் மார்ச் 6ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக விருப்ப மனு அளித்தவர்களைச் சந்தித்து தொகுதி நிலவரம் - வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராயவிருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

நாள்தோறும் சுமார் 10 மாவட்டங்களைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் நேர்காணலில் பங்கேற்கவிருப்பதால், கழகத் தொண்டர்களால் - நிர்வாகிகளால் நிறைந்திருக்கிறது அண்ணா அறிவாலயம்.

பாசிச பா.ஜ.க - அடிமை அ.தி.மு.க அரசை வீழ்த்த இணைந்திருக்கும் வெற்றிக் கூட்டணியின், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையும், கழகத் தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தி.மு.க சார்பில் அமைக்கப்பட்ட தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் கூட்டணிக் கட்சியினரோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன. இக்கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கையெழுத்தானது.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையவிருப்பதை உறுதிசெய்யும் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணிக் கட்சியினர், தொண்டர்களால் விழாக்கோலம் பூண்டுள்ளது தி.மு.க தலைமையகம்.

banner

Related Stories

Related Stories