தி.மு.க

“NLCIL பாய்லர் பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைத்ததே விபத்துக்கு காரணம்” : தி.மு.க MLA குற்றச்சாட்டு!

ஊழியர்கள் பாதிக்கப்பட்டால் பணிபுரிபவர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்து நிவாரணத் தொகை தரப்படும் என்று NLCIL நிர்வாகம் அறிவித்துள்ளது கேலிக்கூத்தான முடிவு என தி.மு.க எம்.எல்.ஏ குற்றம் சாட்டியுள்ளார்.

“NLCIL பாய்லர் பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைத்ததே விபத்துக்கு காரணம்” : தி.மு.க MLA குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

NLCIL நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் இரண்டாம் அனல் மின் நிலையத்தில் ஐந்தாவது மற்றும் ஆறாவது யூனிட்களில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு கூடுதல் நிவாரணமும், அவர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பில் தகுதி மற்றும் படிப்பிற்கேற்ற வகையில் வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டுமென்று கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ வெளியிள்ள அறிக்கையில், “NLCIL இரண்டாம் அனல் மின் நிலையத்தில் ஐந்து மற்றும் ஆறாவது யூனிட்களில் பாய்லர் வெடித்த விபத்தில் இதுவரை ஒப்பந்த, இன்கோசர்வ், நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் என 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தொடர் உயிரிழப்புகளும், மேலும் 10 பேர் படுகாயமடைந்து, மேல் சிகிச்சையிலுள்ள நிகழ்வு மிகவும் மனவேதனையையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

இரண்டாம் அனல் மின் நிலையத்தில் கடந்த வருடம் 2019 ஜுன் 9 மற்றும் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ஆறாவது யூனிட்டிலும், தற்சமயம் ஐந்தாவது யூனிட்டில் என தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவது நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் தான் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இதுவரை 20 உயிர்களை காவு வாங்கிய பின்பும் மெத்தன போக்கை காட்டும் NLCIL நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

“NLCIL பாய்லர் பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைத்ததே விபத்துக்கு காரணம்” : தி.மு.க MLA குற்றச்சாட்டு!

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து NLCIL எடுத்ததாகக் கூறப்படும் நடவடிக்கைகள் மற்றொரு விபத்தைத் தவிர்க்க போதுமானதாக இல்லாமல் இருப்பதனால், அப்பாவி தொழிலாளிகளின் விலை மதிப்பற்ற உயிர்கள் பறிபோகிறது. இதனால் இவர்களின் குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

இந்த விபத்துக்கள் குறித்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள நிலையில் விபத்துகள் மேலும் மேலும் நடைபெறுவது வருத்தமளிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் NLCIL நிர்வாகத்தில் முறையான பராமரிப்பு இல்லாததே ஆகும். பாய்லர் பராமரிப்பு பணிகளை, அதனை நிறுவிய மத்திய அரசு நிறுவனமான பெல் நிறுவனத்திற்கு கொடுக்காமல், தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு தரமற்ற பணிகள் மேற்கொள்வதால் தான் தொடர் விபத்துக்கள் ஏற்படுகிறது என்று தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்துக்கள் குறித்து அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழு உரிய விசாரணை நடத்தி, விபத்துக்கான உண்மையான காரணத்தை நடுநிலையோடு கண்டறிந்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும். மேலும் NLCILயில் இந்த விபத்துக்கள் நடப்பது சமீப காலத்தில் ஒரு வாடிக்கையாகி விட்டது. தொடர்ந்து நிர்வாகம் இதுபோன்ற விபத்துக்கள் நடக்காத வண்ணம் அங்கு பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பிற்கான உத்திரவாதத்தை அளித்திட வேண்டும்.

“NLCIL பாய்லர் பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைத்ததே விபத்துக்கு காரணம்” : தி.மு.க MLA குற்றச்சாட்டு!

மேலும் உயிரிழந்த மற்றும் காயமடைந்துள்ளவர்களுக்கு நிர்வாகம் அறிவித்துள்ள நிவாரணத் தொகை மிக சொற்ப அளவிலானதாகவே உள்ளது. அந்த தொகையும் அங்கு பணிபுரிபவர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்து தரப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது கேலிக்கூத்தான முடிவாகும்.

சாதாரணமாக சாலை விபத்துக்களில் கிடைக்கும் இழப்பீட்டுத் தொகையே இதற்கு சமமாக இருக்கும்போது, நிறுவனத்தின் உற்பத்திக்காகவும், அதன் வளர்ச்சிக்காவும் தங்கள் உயிரையே கொடுத்தவர்களுக்கு நிர்வாகம் தன் பங்காக அளிக்கும் நிவாரணம் எவ்வளவு தான் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இந்த மாவட்டத்தின் இயற்கை வளத்தை சுரண்டியும், ஒருகாலத்தில் ஆர்டீஷியன் நீரூற்றுகள் நிறைந்த இந்த மாவட்டத்தின் நீர் ஆதாரத்தை, நிலக்கரி வெட்டியெடுக்க பாழாக்கிய இந்நிறுவனம் CSR FUND-ஐ சென்ற வருடம் மத்திய அமைச்சர் ஃபியூஸ்கோயல் மூலம் ரயில்வே துறைக்கு கொண்டு சென்றிருக்கும் நிலையில், மீண்டும் இந்த வருடமும் வட இந்தியாவுக்கே அந்தத் தொகையை முழுவதுமாக கொண்டு செல்ல திட்டமிடப்படுவதாக அறிகிறேன்.

இப்படி இங்கே லாபம் ஈட்டும் பணத்தை பாதிக்கப்படும் தொழிலாளியின் குடும்பங்களுக்கும் மற்றும் இந்த மாவட்ட மக்களுக்கும் கொடுக்க மனம் வராதது வேதனையளிக்கிறது. அதேபோல் இறந்தவர்களின் மற்றும் காயமடைந்தவர்களின் வாரிசுகளுக்கு கண்டிப்பாக அவர்களின் கல்வித் தகுதிற்கேற்ப, தகுதியான வேலைவாய்ப்பை வழங்கிட வேண்டும்.

“NLCIL பாய்லர் பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைத்ததே விபத்துக்கு காரணம்” : தி.மு.க MLA குற்றச்சாட்டு!

இந்த தொடர் விபத்துக்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக தமிழக முதலமைச்சர் இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டு, பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்டும் நிர்வாகத்திற்கு எந்தவித அழுத்தமும் கொடுக்காமல் வேடிக்கை பார்ப்பதை கைவிட வேண்டும்.

தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தபோது நெய்வேலி பிரச்சினைகளில் அவரே நேரிடையாக தலையிடுவதோடு, என்னையும் நிர்வாகத்தோடு கலந்துபேசி தீர்வுகான வைப்பார். ஆனால், இப்போதோ ஆளும் கட்சியினர் இங்கு வந்து வேடிக்கை பார்த்துவிட்டு சென்று விடுகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென்று கேட்டுக்கொள்வதோடு, NLCILயில் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு பணிபுரியும் இடத்தில் பாதுகாப்பு உத்திரவாதத்தை ஏற்படுத்திக் கொடுத்து விட்டு உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories