தி.மு.க

தி.மு.க, அ.தி.மு.க மாநிலங்களவை வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு : வாபஸ் பெற மார்ச் 18 கடைசி நாள்!

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

தி.மு.க, அ.தி.மு.க மாநிலங்களவை வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு : வாபஸ் பெற மார்ச் 18 கடைசி நாள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் இன்று பரிசீலிக்கப்பட்டன.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

எனவே அந்த இடங்களை பூர்த்தி செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த மார்ச் 6ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. தி.மு.க சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ, அ.தி.மு.க சார்பில் தம்பிதுரை, கே.பி.முனுசாமி, ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் தவிர சுயேட்சையாக பத்மராஜன், அக்னி ராமச்சந்திரன், இளங்கோ யாதவ் உட்பட மொத்தம் 9 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை செயலாளர் அறையில், வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் முன்னிலையில், பேரவை செயலாளரும், தேர்தல் நடத்தும் அலுவலரான சீனிவாசன், வேட்பு மனுக்களை பரிசீலனை செய்தார்.

தி.மு.க, அ.தி.மு.க மாநிலங்களவை வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு : வாபஸ் பெற மார்ச் 18 கடைசி நாள்!

வேட்பாளர்களின் வேட்பு மனுவை 10 சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்மொழிய வேண்டும். சுயேட்சை வேட்பாளர்களை யாரும் முன்மொழியாததால் அவர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து மார்ச் 18-ம் தேதி மாலை 3 மணிக்குள் போட்டியிட விரும்பாதவர்கள் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. யாரும் திரும்பப்பெறாத நிலையில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த 6 உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஒருவேளை போட்டி இருப்பின் மார்ச் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

banner

Related Stories

Related Stories