தி.மு.க

குடிநீர் கேட்டு கனிமொழி எம்.பி தலைமையில் சென்னை துறைமுகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!

குடிநீர் தட்டுப்பாட்டை போக்காத அ.தி.மு.க அரசைக் கண்டித்து சென்னை துறைமுகப் பகுதியில் கனிமொழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடிநீர் கேட்டு கனிமொழி எம்.பி தலைமையில் சென்னை துறைமுகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு தலைத்தூக்கியுள்ள நிலையில், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சரோ தண்ணீர் வறட்சி ஏதும் இல்லை, எல்லாம் வதந்திதான் என பேசியிருந்தார். ஆனால் மக்களோ தினந்தோறும் தண்ணீருக்காக அல்லல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தண்ணீர் பிரச்னையை போக்க நடவடிக்கை எடுக்காத எடப்பாடியின் அ.தி.மு.க அரசைக் கண்டித்து தமிழகமெங்கும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குடிநீர் கேட்டு கனிமொழி எம்.பி தலைமையில் சென்னை துறைமுகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!

அவ்வகையில், சென்னை துறைமுகப் பகுதியில் தி.மு.க நாடாளுமன்றக் குழு துணைத்தலைவர் கனிமொழி தலைமையில் தி.மு.கவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அ.தி.மு.க அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களும் எழுப்பப்பட்டது.

குடிநீர் வாரியத்தை முற்றுகையிட்டும் தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போராட்டத்தில் மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன் கலந்துகொண்டார்.

banner

Related Stories

Related Stories