தி.மு.க

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏக்கள் 13 பேரும் பதவியேற்பு!

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க. எம்.எல்.ஏக்கள் 13 பேரும் தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று பதவியேற்றனர்.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏக்கள் 13 பேரும் பதவியேற்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டமன்றத் தொகுதிகளி கடந்த ஏப்.,18 மற்றும் மே 19ல் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில், தி.மு.க. அமோக வெற்றியை பெற்றது.

இது மட்டுமில்லாமல் மக்களவைத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்று நாடாளவில் 3வது பெரிய கட்சி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏக்கள் இன்று கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் பதவியேற்றனர். சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தி.மு.க. எம்.எல்.ஏக்கள் 13 பேருக்கும் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

முன்னதாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க. எம்.எல்.ஏக்கள் 13 பேரும் வாழ்த்து பெற்றனர்.

banner

Related Stories

Related Stories