தி.மு.க

மோடி அரசுக்கு முன்னால் தேர்தல் ஆணையம் கலைக்கப்பட வேண்டும்!- முரசொலி தலையங்கம் 

மோடி அரசுக்கு முன்னால் தேர்தல் ஆணையம் கலைக்கப்பட வேண்டும்!- முரசொலி தலையங்கம் 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கோவையிலிருந்து 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கும், 20 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. வாக்கு இயந்திரப் பெட்டிகளை ஊர் ஊராக மாற்றுவது அல்ல அசைப்பது கூட மாபெரும் குற்றமாகும்.

என்ன காரணத்திற்காக இந்த பெட்டிகள் இடம் மாற்றம் செய்யப்படுகிறது என நாட்டுக்கு அறிவித்தப் பிறகு, தொகுதிக்குட்பட்ட அதிகாரிகள், தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் என அனைவரையும் அழைத்துப் பேசிவிட்டுத்தான் எதையும் செய்யவேண்டும். தேர்தல் தொடங்கியதிலிருந்து எத்தனை முறைகேடுகள். தி.மு.க புகார் கொடுக்கப்பட்டவுடன், கெட்ட கனா கண்டவன் போல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தமிழகத்தில் 13 மாவட்டங்களில், 46 வாக்குச்சாவடிகளில் தவறு நடந்திருக்கிறது எனப் பேட்டி தருகிறார்.

தேர்தலைக் கூட ஒழுங்காக நடத்தத் துப்பு இல்லாத ஒரு ஆணையம் எதற்கு? எனவும், மோடி அரசு கவிழ்வதற்கு முன்னால் எந்தவொரு சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாத தேர்தல் ஆணையமே முதலில் கலைக்கப்பட வேண்டும் எனவும் முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.

banner

Related Stories

Related Stories