சினிமா

insta இளம் பிரபலம் தற்கொலை.. மும்பை நடிகையை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி.. - அதிரும் திரையுலகம் !

 insta இளம் பிரபலம் தற்கொலை.. மும்பை நடிகையை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி.. - அதிரும் திரையுலகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த 3 நாட்களுக்கு முன்பு மும்பையை சேர்ந்த இளம் சீரியல் நடிகை துனிஷா ஷர்மா ஷூட்டிங்கின்போது தனது ஓய்வறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது முன்னாள் காதலன் ஷசீன் முகமது கான் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிகழ்வு பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தற்போது சத்தீஸ்கரை சேர்ந்த இன்ஸ்டா பிரபலமான இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 insta இளம் பிரபலம் தற்கொலை.. மும்பை நடிகையை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி.. - அதிரும் திரையுலகம் !

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் உள்ள கெலோ விஹார் காலனியில் வசித்து வருபவர் லீனா நாக்வன்ஷி. 22 வயது இளம்பெண்ணான இவர், ஒரு இன்ஸ்டா பிரபலம் ஆவார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனியாக youtube சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். அதில் பெரிய அளவில் பார்வையாளர்களை கவரவில்லை என்றாலும், இன்ஸ்டாவில் 10 ஆயிரம் பின்தொடர்புபவர்களை கொண்டுள்ளார்.

பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வரும் இவர், அவ்வப்போது செய்திகளிலும் வருவார். இவருக்கு ஒரு ஆண் நண்பர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் இன்று தனது வீட்டிலுள்ள மாடியில் உள்ள தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

 insta இளம் பிரபலம் தற்கொலை.. மும்பை நடிகையை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி.. - அதிரும் திரையுலகம் !

இதனை கண்ட குடும்பத்தினர், லீனாவின் உடலை தூக்கிலிருந்து கீழே இறக்கினார். அப்போது அவருக்கு உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து இதுகுறித்து காவல்துறைக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரணையை தொடங்கினர்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் கூறுகையில், "இன்று மதியம் சுமார் ஒரு மணியளவில் கெலோ விஹார் காலனியில் வசிக்கும் 22 வயதான லீனா என்பவர் வீட்டின் மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்தது.

நாங்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, ​​அவர் துப்பட்டாவால் கயிறு கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் அவர் உயிருடன் இருப்பதாக நினைத்து குடும்பத்தினர் அவரை தூக்கில் இருந்து இறக்கினர். தற்போது அவரது உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளோம். எதுவானாலும் உடற்கூறாய்வு முடிவு வெளியான பிறகே தெரியவரும்.

சம்பவ இடத்திலிருந்து தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. எனவே அவரது மொபைல் போன் மட்டும் கைப்பற்றியுள்ளோம். தனிப்பட்ட காரணங்களால் லீனா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான உறுதியான காரணம் எதுவும் இதுவரை தெரியவரவில்லை" என்றார்.

 insta இளம் பிரபலம் தற்கொலை.. மும்பை நடிகையை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி.. - அதிரும் திரையுலகம் !

அதற்கு சில மாதங்களுக்கு முன்பு இந்தி சீரியல் தமிழில் டப் செய்து வெளியான 'மூன்று முடிச்சு' சீரியலில் அஞ்சலியாக நடித்த வைஷாலி தக்கர் என்ற இளம் நடிகையும் தனது முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 insta இளம் பிரபலம் தற்கொலை.. மும்பை நடிகையை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி.. - அதிரும் திரையுலகம் !

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

banner

Related Stories

Related Stories