சினிமா

7 வருடங்களுக்கு பிறகு திரையில் வடிவேலு குரல்.. 'அப்பத்தா' பாடலில் திடீர் Entry கொடுத்த பிரபுதேவா..

வடிவேலுவின் 'நாய் சேகர் Returns' படத்தின் முதல் பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

7 வருடங்களுக்கு பிறகு திரையில் வடிவேலு குரல்.. 'அப்பத்தா' பாடலில் திடீர் Entry கொடுத்த பிரபுதேவா..
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

வடிவேலுவின் 'நாய் சேகர் Returns' படத்தின் முதல் பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

ராஜ்கிரண் நடிப்பில் வெளியான 'என் ராசாவின் மனசிலே' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலக்கு அறிமுகமானவர் தான் நடிகர் வடிவேலு. அந்த படத்திற்கு பிறகு பல்வேறு படங்களில் காமெடி, குணச்சித்திர வேடத்தில் நடித்த இவர், 'போடா போடா புண்ணாக்கு', 'எட்டணா இருந்தா எட்டூரும் என் பாட்ட கேட்கும்..' ஆகிய பாடல்களின் மூலம் பாடகராகவும் அறிமுகமானார்.

கரத்த குரலில் இவர் பாடினாலும், இவரது குரலுக்கும் ரசிகர்கள் குவிந்தனர். அதன் பின்னர், பல படங்களில் ரஜினி, விஜய், அஜித், விஜய், கமல், விக்ரம், சிம்பு, ஜெயம்ரவி உள்ளிட்ட பல முன்னனி ஹீரோக்களுடன் காமெடி மற்றும் சிறப்பு தோற்றத்தில் நடித்து புகழ் மேல் புகழ் பெற்றார். இதையடுத்து பெரிய அளவில் பெயர் கொடுத்து இன்றும் நிலைத்து நிற்கும் படமான 'இம்சை அரசின் 23-ம் புலிகேசி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

7 வருடங்களுக்கு பிறகு திரையில் வடிவேலு குரல்.. 'அப்பத்தா' பாடலில் திடீர் Entry கொடுத்த பிரபுதேவா..

அதன்பின்னர் சில படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் அது அவருக்கு பெரிதாக பெயர் ஈட்டிக்கொடுக்கவில்லை. எனவே மீண்டும் காமெடி தளத்தில் இருந்தார். கிட்டத்தட்ட 35 வருடங்களாக சினி உலகில் நீடித்து இருக்கும் வடிவேலு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சில பிரச்னை காரணமாக திரையில் தோன்றாமல் இருந்தார். அதன்பின்னர் மீண்டும் தோன்ற தொடங்கியுள்ளார்.

7 வருடங்களுக்கு பிறகு திரையில் வடிவேலு குரல்.. 'அப்பத்தா' பாடலில் திடீர் Entry கொடுத்த பிரபுதேவா..

இவர் இறுதியாக கடந்த 2015-ல் இவரது நடிப்பில் வெளியான 'எலி' படத்தில் "கண்ணமேய விட்டியா.." என்ற பாடலை பாடினார். அதன்பின்னர் திரையில் பெரிதாக இவரது குரலில் பாடல் எதுவும் இடப்பெறவில்லை. இந்த நிலையில் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' என்ற படத்தில் இவர் நடித்து வருகிறார். இவருடன் 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கி, 'டாக்டர்' பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பல் பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

7 வருடங்களுக்கு பிறகு திரையில் வடிவேலு குரல்.. 'அப்பத்தா' பாடலில் திடீர் Entry கொடுத்த பிரபுதேவா..

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்த படத்தின் முதல் பாடலான 'அப்பத்தா..' பாடலை இன்று வெளியிடுவதாக திரைப்பட குழுவினர் அறிவித்தனர்.

இந்த நிலையில், தற்போது "அப்பத்தா.." பாடல் வெளியாகி தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான இப்பாடலுக்கு பிரபுதேவா டான்ஸ் மாஸ்டராக இடம்பெற்றுள்ளார். மேலும் இப்பாடலை வைகை புயல் வடிவேலு பாடியுள்ளார். இவரது குரலில் சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பாடல் வெளியாகியுள்ளது.

7 வருடங்களுக்கு பிறகு திரையில் வடிவேலு குரல்.. 'அப்பத்தா' பாடலில் திடீர் Entry கொடுத்த பிரபுதேவா..

கடைசியாக இவரது நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான 'எலி' படத்தில் இடம்பெற்ற "கண்ணமேய விட்டியா.." பாடலை பாடினார். இந்த நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இவர் திரையில் பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் வெளியான 1 மணி நேரத்திலேயே 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த பாடலின் இறுதியில் நடன இயக்குநர் பிரபு தேவாவும் தோன்றுகிறார்.

தற்போது இவர் உதயநிதி நடிப்பில் வெளியாகவுள்ள 'மாமன்னன்', ராகவா லாரன்ஸ் நடிப்பில் 'சந்திரமுகி 2' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories