சினிமா

சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் இந்த சமூகத்திற்கு என்ன செய்வான்?- ‘ஜோக்கர்’ நாயகன் நல்லவனா? கெட்டவனா?

’பேட்மேன்’ காமிக்ஸ் மற்றும் படங்களின் முக்கியமான பாத்திரம் ‘ஜோக்கர்’ பாத்திரம்!

சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் இந்த சமூகத்திற்கு என்ன செய்வான்?- ‘ஜோக்கர்’ நாயகன் நல்லவனா? கெட்டவனா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

பேட்மேனை எதிர்க்கும் வில்லனாக வருபவனே ஜோக்கர் பாத்திரம். அவன் ஒரு ’மூடத்தனமான’, ‘மனநலப் பிறழ்வை’ முன்னிறுத்தும் பாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருப்பான். கிறிஸ்டோபர் நோலன் ஜோக்கர் பாத்திரத்துக்கு தன் டார்க் நைட் படத்தில் ஒரு தன்மையை வழங்கியிருந்தார். அதற்குப் பிறகு, ஜோக்கர் பாத்திரத்தை மேம்படுத்த முடியுமா என்கிற கேள்வி பலரிடம் தோன்றுமளவுக்கு பாத்திரப் படைப்பு இருந்தது. ஆனால் நோலனின் ஜோக்கரையும் விஞ்சும் அளவுக்கு ‘ஜோக்கர்’ படத்தில் இருந்த பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இரும்பு குதிகால் புத்தகத்தில் ஒரு அத்தியாயம் உண்டு. அதல பாதாளத்து மக்கள் என ஒரு மக்கள் பிரிவை குறிப்பிடப்பட்டிருக்கும். அவர்களை பற்றி இப்படியான விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கும்.

சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் இந்த சமூகத்திற்கு என்ன செய்வான்?- ‘ஜோக்கர்’ நாயகன் நல்லவனா? கெட்டவனா?

‘அதல பாதாளத்து மக்கள், படு பரிதாப நிலையில் இருக்கிறார்கள். அவர்களை பொறுத்தவரையில், சாதாரணமான பள்ளி கல்வியும் இல்லாமல் போனது. அவர்கள் அனைவரும் மிக கீழான, இழிவான நிலையில் சீழ் வடியும் புண்களைபோல் நாற்றமடிக்கும் அழுக்கு குடிசைப்பகுதிகளில் கால்நடைகளைப் போல் வாழ்கிறார்கள். அவர்கள்தான் கூலி அடிமைகள். அவர்கள் விரும்பிய வேலை செய்யும் உரிமையை இழந்தவர்கள். ஓரிடத்திலிருந்து வேறு இடத்துக்கு செல்லும் உரிமை இழந்தார்கள். ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது. ஆயுதங்களை ஏந்தக் கூடாது என்ற சட்ட இறுக்கங்களுக்குள் வாழ்பவர்கள்.

அவர்கள் அனைவரும் கொட்டடிகளில் மாடுகளை போல் அடைத்து வைத்து வேலை வாங்கப் படுகிறார்கள். இப்படி ஒரு நிலை தான் அடித்தட்டு மக்களிடம் நிலவுகிறது. முழு உண்மையைக் கூற வேண்டுமானால், அந்தத் தொழிலாளர்களின் அழுக்குக் குடியிருப்பு பகுதிகளில்தான் நரக பாதாள உலகின் மகாமிருகத்தின் கர்ஜனை தெறிக்கிறது. அந்த மிருகத்தை கண்டுதான் சிலராட்சி அரசாங்கம் அவ்வளவு அச்சப்படுகிறது. ஆனால், அவர்களே படைத்ததுதான் அது. அவர்களை கண்டிப்பாக தன் கோரைப் பற்களால் கவ்வி கடித்து குதற தனது சமயத்தை எதிர்நோக்கி காத்திருந்தது அந்த மிருகம்.’

சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் இந்த சமூகத்திற்கு என்ன செய்வான்?- ‘ஜோக்கர்’ நாயகன் நல்லவனா? கெட்டவனா?

ஜோக்கர் படத்தில் ஒரு வசனம் உண்டு. “ஏன் எல்லாரும் இவ்ளோ rude-ஆ இருக்கீங்க... ஒருத்தர்கிட்ட ஒருத்தர் இவ்ளோ வெறுப்ப காட்டுறீங்க... ஆறுதலா ஒரு வார்த்தை கூட ஏன் பேச மாட்டேங்கறீங்க?”

இன்று சுற்றி பாருங்கள். உங்களுக்கு அருகே நேர்ந்த தற்கொலைகளை பற்றி விசாரித்து பாருங்கள். இந்த வசனம் அச்சம்பவங்களுக்கு பின் நிச்சயம் இருக்கும்.

நம் சக மனிதர்களிடம் இருந்து பிரித்து நம்மை ஓட வைப்பது எது? நம் சக மனிதனை நமக்கு எதிரியாக மாற்றுவது எது? கூட்டு வாழ்வில் பரிணாமம் கொண்ட நம்மை நம் இயல்புக்கு மீறி தனியாக ஆக்குவது எது?

எல்லா கேள்விகளும் ஒன்று திரளும் காலத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.

சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் இந்த சமூகத்திற்கு என்ன செய்வான்?- ‘ஜோக்கர்’ நாயகன் நல்லவனா? கெட்டவனா?

ஒரு தனி மனிதனின் வாழ்க்கையிலிருந்து அத்தனை பொறுப்புகளையும் அரசு உதறிக் கொள்ளுமானால், ஒரு தனி மனிதனின் வர்க்க நலன் சார்ந்து அரசு செயல்படுமானால், பிறகு அங்கு அதல பாதாளத்து மக்களே வெளிவருவார்கள். அவர்களின் வருகை சாதாரணமாக இருக்காது. இரும்பு குதிகால் புத்தக பத்தி சொல்வது போல்,

‘கிழிந்த ஆடைகளை அணிந்த ஆண், பெண், குழந்தைகள், வயோதிகர்கள் அடங்கிய மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தங்கள் முகத்தில் கனிவு என்ற ஒன்றை அழித்துவிட்ட்டு பிசாசுகளைப் போல் பயங்கரமாக மாறி, பூமியே அதிரும்படி கால்களை அடித்து மிதித்து செல்கிறார்கள். அந்த மக்களில் சில குரங்குகள் இருக்கின்றன, புலிகள் இருக்கின்றன, ரோமங்கள் நிறைந்த கரடிகள் இருக்கின்றன, தங்களின் ரத்தத்தை உறிஞ்சி எடுத்த இந்த சமூக வாழ்வை தூக்கி எறிந்த முகங்கள் இருக்கின்றன. நீதிநெறி கட்டுப்பாட்டை கைவிட்டுவிட்டு கண்டபடி மேய்ந்த யானைகள் இருக்கின்றன. நலிந்தவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் பெரும் தலைமுடியும், தாடியுமாக, பிரம்மாண்டம் கொண்டு மரணத்தின் முகவர்களாக இருந்தனர். மக்கிப் போன இளைஞர்கள், பேய்முகத்தினர், அழகற்றவர்கள். விகாரமானவர்கள், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், பிச்சைக்காரர்கள் என பெரும் கூட்டத்தினர் அவர்கள். சமூகம் கழிந்துவிட்ட அழுக்கு, இந்த நகரம் கழித்து விடப்பட்ட அழுக்கு. இங்கே நடு நகரத்தில் பெரும் பிரவாகம் எடுத்து மிதக்கிறது. இது ஆக்ரோஷமடைந்து, பெரும் கூச்சலிட்டபடி, நெரித்து மிதித்து தள்ளி ஓடும் பெரும் அரக்கக்கும்பல்!’

சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் இந்த சமூகத்திற்கு என்ன செய்வான்?- ‘ஜோக்கர்’ நாயகன் நல்லவனா? கெட்டவனா?
Niko Tavernise

இவை எதுவும் கதைகள் அல்ல. வெறும் படமும் அல்ல. இன்று நாம் வாழ்ந்திருக்கும் தன்மையும் சூழலும் இவைதாம். அதை புரிந்ததால்தான் ஹாலிவுட்டில் ஒரு காமிக்ஸ் கதாபாத்திரத்தை கொண்டு கூட மனிதச்சமூகம் எட்டியிருக்கும் விளிம்பை சொல்லி வடிகால் தேடிக் கொள்ள முயலுகிறார்கள்.

ஆனால் ஜோக்கர் படத்தின் இறுதிக்காட்சியில் வரும் வசனம் போல,

“சமூகத்தால புறக்கணிக்கப்பட்ட ஒருத்தன் அதனாலேயே மன பேதலிப்பும் அடைஞ்சான்னா, அவன்கிட்ட இருந்து என்ன கிடைக்கும்?”

“உங்களுக்கு கெடச்சிருக்க வேண்டிய நியாயம் கெடைக்கும்!”

நாம் அனைவருமே ஒரு மனச்சிதைவு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நாம் அனைவருமே மனச்சிதைவின் புத்திரர்கள்.

மனச்சிதைவுகளுக்கு இடையேதான் வாழ்க்கையை தேடிக் கொண்டிருக்கிறோம்.

banner

Related Stories

Related Stories