சினிமா

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்: வெற்றிக்களிப்பில் நாசர் அணி; யார் யாருக்கு எவ்வளவு வாக்கு கிடைத்தது?

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்: வெற்றிக்களிப்பில் நாசர் அணி; யார் யாருக்கு எவ்வளவு வாக்கு கிடைத்தது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் நாசர் தலைமையில் ஒரு அணியினரும், கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர்.

தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் போட்டியிட்டிருந்தனர். அதேபோல் எதிரணியில் தலைவர் பதவிக்கு பாக்யராஜும், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷும், பொருளாளர் பதவிக்கு பிரசாந்த்தும் போட்டியிட்டிருந்தனர்.

இந்த தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தலை செல்லாது என்ற அறிவித்த நீதிமன்றம் வாக்கு எண்ணிக்கைக்கும் தடை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தொடர்ந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தேர்தல் செல்லும் என்று அறிவித்து வாக்குகளை எண்ண உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஏழுமலை என்ற துணை நடிகர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்: வெற்றிக்களிப்பில் நாசர் அணி; யார் யாருக்கு எவ்வளவு வாக்கு கிடைத்தது?

இந்நிலையில் இன்று சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள குட் ஷெப்பர்ட் பள்ளி வளாகத்தில் வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடந்து முடிந்திருக்கிறது.

அதில் நிர்வாகிகள் பெற்ற வாக்குகளின் விவரம்:

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் 1701 வாக்குகள் பெற்று வெற்றி. பாக்யராஜை விட 647 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். பாக்யராஜ் 1054 வாக்குகளே பெற்றிருந்தார்.

பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் 1720 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஐசரி கணேஷ் விட 688 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். ஐசரி கனேஷ் 1015 வாக்குகள் பெற்றிருந்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்: வெற்றிக்களிப்பில் நாசர் அணி; யார் யாருக்கு எவ்வளவு வாக்கு கிடைத்தது?

பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி 1827 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிரசாந்தை விட 908 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

துணைத் தலைவர் பதவிகளுக்கு போட்டியிட்ட பூச்சி முருகனும், கருணாஸும் வெற்றி பெற்றுள்ளனர். அதன்படி குட்டி பத்மினியை எதிர்த்து போட்டியிட்ட பூச்சி முருகன் 598 வாக்குகள் வித்தியாசத்தில் 1613 வாக்குகள் பெற்றும், உதயாவை எதிர்த்து போட்டியிட்ட கருணாஸ் 632 வாக்குகள் வித்தியாசத்தில் 1605 வாக்குகள் பெற்றும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories