சினிமா

”ஜெய்பீம் சர்ச்சையை அடுத்து ’எதற்கும் துணிந்தவன்’ ஆக எழுந்து நின்ற சூர்யா” - வெளியானது புதிய அறிவிப்பு!

ஜெய்பீம் படத்தின் வெற்றிக் கொண்டாத்தில் இருந்தே வெளியே வராத சூர்யா ரசிகர்களுக்கு எதற்கும் துணிந்தவன் படக்குழு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு மேலும் குதூகலப்படுத்தியுள்ளது.

”ஜெய்பீம் சர்ச்சையை அடுத்து ’எதற்கும் துணிந்தவன்’ ஆக எழுந்து நின்ற சூர்யா” - வெளியானது புதிய அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 40வது படமாக உருவாகி வருகிறது ‘எதற்கும் துணிந்தவன்’. பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். எதற்கும் துணிந்தவன் படம் பொள்ளாச்சி வன்கொடுமை நிகழ்வை போன்ற பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை மையப்படுத்தியதாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஏற்கெனவே நடிகர் சூர்யா சமூகம் சார்ந்த நிகழ்வுகளை மையப்படுத்திய படங்களாக தயாரித்தும் நடித்தும் வருகிறார். அண்மைச் சான்றாக ஜெய்பீம் வெற்றியை குறிப்பிடலாம். அவ்வகையில் எதற்கும் துணிந்தவன் படத்தின் கருவும் பாலியல் கொடுமைகளுக்கு எதிரானதாக இருக்கும் என்று வெளியான தகவல் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி எதற்கும் துணிந்தவன் 2022ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து ரசிகர்கள் சமூக வலைதளத்தை கலக்கி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories