சினிமா

தனது 10வது பட அறிவிப்பை வெளியிட்ட இயக்குநர் வெங்கட் பிரபு... நாயகன் யார்?

மாநாடு படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில், தனது 10வது பட அப்டேட்டை வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.

தனது 10வது பட அறிவிப்பை வெளியிட்ட இயக்குநர் வெங்கட் பிரபு... நாயகன் யார்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ‘மாநாடு’ படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதன் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. கொரோனா பிரச்சனைகள் முடிந்த பின்பு படம் தியேட்டரில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வெங்கட் பிரபு தன்னுடைய அடுத்த பட அப்டேட்டை வெளியிட்டிருக்கிறார்.

அவர் அடுத்த படத்தை ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிளாக் டிக்கெட் கம்பெனி இணைந்து தயாரிப்பதாக அறிவித்திருக்கிறார். இது வெங்கட்பிரபுவின் பத்தாவது படமாக தயாராகிறது. இந்தப் படத்தின் நடிகர்கள் யார் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், இதில் அசோக் செல்வன் தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கிற தகவல் பரவி வருகிறது.

மேலும் இது காமெடி ஜானரில் உருவாகும் படம் எனவும், இதில் சில நடிகைகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் எனவும் சொல்லப்படுகிறது. இந்தப் படத்திற்கு வெங்கட்பிரபுவின் தம்பி பிரேம் ஜி இசையமைக்கலாம் எனக் கூறப்படுகிறது. விரைவில் இந்தப் படம் பற்றிய மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories