சினிமா

ஊரடங்கு தளர்வு எதிரொலி.. சினிமா டிக்கெட் விலையை குறைக்க திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு! #Lockdown5

தமிழகத்தில் சினிமா டிக்கெட் விலையை குறைக்க தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர்.

ஊரடங்கு தளர்வு எதிரொலி.. சினிமா டிக்கெட் விலையை குறைக்க திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு! #Lockdown5
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

68 நாட்களாக கடைபிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு மட்டும் ஜூன் மாதம் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது மத்திய மாநில அரசுகள். இந்நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் சினிமா டிக்கெட் கட்டணத்தை குறைப்பதாக முடிவெடுத்துளனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:-

“தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றை தடுக்க மார்ச் 19 அன்று திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. மார்ச் 31 முதல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு தமிழகத்தில் இன்று வரை சில மாற்றங்களுடன் தொடர்ந்து வருகிறது.

கொரானோ தொற்று பரவலை பொறுத்து சிறு மற்றும் குறுந்தொழில்கள் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என எல்லா தொழில்களையும் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதலில் மூடப்பட்ட தனித்திரையரங்குகள், மால், மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கு அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை.

அரசாங்கத்தின் எந்தவிதமான சலுகைகளும் இன்றி சொந்த முதலீட்டில் நடைபெற்று வந்த திரையரங்க தொழில் மூலம் அரசுக்கு வருவாய் தரக்கூடியது இந்த தொழில் மூலம் சுமார் 50,000 தொழிலாளர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைத்து வந்தது.

ஊரடங்கு தளர்வு எதிரொலி.. சினிமா டிக்கெட் விலையை குறைக்க திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு! #Lockdown5

திரையரங்குகள் மூடப்பட்ட பின் 50,000 தொழிலாளர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. பிற தொழில்களுக்கு விதி முறைகளுடன் அனுமதி வழங்கியது போன்று திரையரங்கு தொழிலை மீண்டும் தொடங்க மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்க வேண்டும் என "தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்" வேண்டுகோள் விடுத்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் கோரிக்கைகளாவன.

திரையரங்கு உரிமையாளர்கள் கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகளை மத்திய மாநில அரசுகள் உடனடியாக வெளியிட வேண்டுகிறோம். அரசு வெளியிடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்த குறைந்தது இரண்டு வார கால அவகாசம் தேவைப்படுவதால் அரசு உடனடியாக விதிமுறைகளை வெளியிட்டுட்டு திரையரங்கு உரிமையாளர்கள் முன் தயாரிப்பு பணிகளை முடிக்க ஆவன செய்ய வேண்டுகிறோம்.

தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து பொருட்கள், போக்குவரத்து செலவுகள் விலையேற்றம் பெற்றுள்ளன. இந்தியாவில் சாமானிய மக்களின் ஒரே பொழுதுபோக்கு திரையரங்குகளில்திரைப்படங்களை கண்டுகளிப்பது சமூக இடைவெளியின் அடிப்படையில் குறைந்த எண்ணிக்கையிலான டிக்கட்டுகள் விற்பன செய்து பார்வையாளர்களை அனுமதிக்க முடியும்.

இதன் காரணமாக டிக்கட் விலையை அதிகரிக்காமல் அதே நேரத்தில் பொருளாதார நெருக்கடியில் இருக்கக்கூடிய திரையரங்கு தொழிலை பாதுகாக்கவும் பார்வையாளர்கள் வருகையை உறுதிப்படுத்தி அதிகரிக்க கீழ்க்கண்ட கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றித்தர வேண்டுகிறோம். தமிழ்நாட்டில் தற்போது 1000 திரையரங்குகள் இயங்கி வருகின்றது இவற்றில் தனி திரையரங்குகள் 700, இரண்டு மற்றும் அதற்கு அதிகமான திரைகளை கொண்ட மால், மல்டிபிளக்ஸ் 300 உள்ளது.

ஊரடங்கு தளர்வு எதிரொலி.. சினிமா டிக்கெட் விலையை குறைக்க திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு! #Lockdown5

தற்பொழுது நடைமுறையிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான கேளிக்கை வரி 8% முழுவதுமாக ரத்துசெய்ய வேண்டுகிறோம். இதனை ரத்து செய்வதன் மூலம் திரையரங்க டிக்கெட் கட்டணம் குறையும். அதிக எண்ணிக்கையில் மக்கள் குடும்பமாக படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். இதன்மூலம் திரையரங்கு, விநியோகஸ்தர்கள், அரசு என அனைத்து பிரிவினருக்கும் வருவாய் கூடுதலாகக் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.

இவ்வாறு செய்வதன் மூலம் தற்பொழுது ₹100க்கு விற்பனைசெய்யப்படும். (GST 12% + LBTtax8%) டிக்கெட் விலை 84 ரூபாய் 5% GSTயுடன் சேர்த்து குறையும். இதன் காரணமாக திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் குறையும். சாமான்ய மக்கள் திரையரங்குக்கு அதிகமாக வருவதற்கான சூழல் உருவாகும். மால், மல்டிபிளக்ஸ் திரைகளுக்கு உள்ளீடு அனுமதியுடன் தற்பொழுது நடைமுறையில் உள்ள 18% , 12% GST வரியை ரத்து செய்து, ஒரே GST 12% நிர்ணயம் செய்து தர வேண்டுகிறோம்.

தேசிய ஊரடங்கு காலத்திற்கு முன்பாக தனி திரையரங்குகளுக்கு அதிகபட்சமாக 15% பார்வையாளர்கள் அளவில்தான் வருகை இருந்தது. மேற்கூறிய கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றும் பட்சத்தில் 20% பார்வையாளர்கள் வரை திரையரங்குக்கு வரக்கூடிய சூழல் ஏற்படும். இல்லாத பட்சத்தில் 10% பார்வையாளர்களுக்கு குறைவாகவே வருவார்கள் இதன் காரணமாக ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் திரையரங்கு தொழில் நலிவடைவதற்கான சூழல் உருவாகும்.

ஊரடங்கு தளர்வு எதிரொலி.. சினிமா டிக்கெட் விலையை குறைக்க திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு! #Lockdown5

தற்பொழுது கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடியுள்ள நிலையில் திரையரங்கிற்கான மின் கட்டணத்தில் 50% சலுகை தர வேண்டுகிறோம். மேலும் தற்பொழுது முழு முடக்ககாலம் வரை திரையரங்கிற்கான சொத்து வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டுகிறோம். தொழில் துவங்கிய பிறகு திரை தொழில் சகஜ நிலை திரும்பும்வரை சொத்து வரியில் 50% சலுகை தர வேண்டுகிறோம்.

தமிழகத்தில் கிராமங்கள் சிறுநகரங்களில் கெளரவத்திற்காக காலங்காலமாக இயங்கிவரும் தனித்திரையரங்குகளை அழிவில் இருந்து காத்திட மத்திய மாநில அரசுகள் மேற்காணும் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டுகிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories