சினிமா

திட்டமிட்டப்படி நாளை வெளியாகுமா ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ : ரிலீஸ் ஆவதில் மீண்டும் சிக்கல்!

தனுஷ் நடித்துள்ள ‘’எனை நோக்கி பாயும் தோட்டா’’ திரைப்படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திட்டமிட்டப்படி நாளை வெளியாகுமா ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ : ரிலீஸ் ஆவதில் மீண்டும் சிக்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நடிகர் தனுஷ், கௌதம் வாசுதேவ் மேனனுடன் முதன்முறையாக இணைந்த படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இந்தப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இந்த படத்திலிருந்து பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், திரைப்படம் பல ஆண்டுகள் ரிலீசாகாமல் இருந்து வந்தது.

திட்டமிட்டப்படி நாளை வெளியாகுமா ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ : ரிலீஸ் ஆவதில் மீண்டும் சிக்கல்!

இந்நிலையில், ''எனை நோக்கி பாயும் தோட்டா'' படம் செப்டம்பர் 6ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த முறையாவது படம் சொன்ன தேதிக்கு வெளியாகுமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், ''எனை நோக்கி பாயும் தோட்டா'' திரைப்படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாகுபலி படத்தை வெளியிட்ட அர்கா நிறுவனம் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. அர்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இருந்து எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை நீக்க அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ்கேப் ஆர்டிஸ்ட் முயன்று வருகிறது.

நாளைக்குள் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியுமா என்பது சந்தேகமே. எனவே ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் மீண்டும் தள்ளிபோவதற்கான வாய்ப்பு உள்ளது.

banner

Related Stories

Related Stories