சினிமா

யார் இந்த ‘அதீரா’ ? : ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்த KGF படக்குழு - விரைவில் வருகிறது இரண்டாம் பாகம்

KGF படத்தின் இரண்டாம் பாகம் குறித்த புதிய அப்டேட் ஒன்றை அதன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

யார் இந்த ‘அதீரா’ ? : ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்த KGF படக்குழு - விரைவில் வருகிறது இரண்டாம் பாகம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஆக்‌ஷன் படம் KGF. கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான இந்தப் படம் யாரும் எதிர்பாராத வகையில், 200 கோடியைத் தாண்டி வசூல் சாதனை படைத்தது.

தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. முதல் பாகம் வெற்றியடைந்ததால் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படம் குறித்த அப்டேட்டுகளை ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் இன்று 11 மணிக்கு முக்கியமான ஒரு தகவலை வெளியிடப் போவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.

படத்தின் ரிலீஸ் தேதி அல்லது பாடலை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த நிலையில், படக்குழுவினர் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் அதீரா யார் என்பது குறித்த தகவல் 29ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் பாகத்தில் இந்த அதீரா கதாபாத்திரம் வந்திருந்தாலும் கதாபாத்திரத்தின் முகத்தைக் காட்டவில்லை. அரபு நாட்டில் காத்திருப்பதாக அந்த கதாப்பாத்திரத்தை காட்டியிருப்பார்கள். கருடன் கதாப்பாத்திரம் முதலாவது பாகத்தில் இறந்துவிட்டதால், இரண்டாம் பாகத்தில் அதீரா கதாப்பாத்திரம் தான் வில்லனாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த கதாபாத்திரம் கதாநாயகனுக்கு நிகராக வலுவான கதையமைப்பை கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அதீரா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிப்பதாக செய்திகள் வலம்வருகின்றன. இதையடுத்து #KGFChapter2 மற்றும் #Adheera ஆகிய இரு ஹேஷ்டேக்குகளும் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.

banner

Related Stories

Related Stories