சினிமா

விஜய் சேதுபதி படத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தேன்.. ஆனால், : அமலா பால் வருத்தம் 

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமான படத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு நடிகை அமலாபால் விளக்கம் அளித்துள்ளார் .

விஜய் சேதுபதி படத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தேன்.. ஆனால், : அமலா பால் வருத்தம் 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ரோகாந்த் இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். அவருக்கு வில்லனாக ‘தடம்’ பட இயக்குநர் மகிழ் திருமேனி நடிக்கிறார்.

இந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அமலாபால் நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் இப்படத்தில் அமலாபாலுக்கு பதிலாக மேகா ஆகாஷ் நடிப்பார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அமலா பால் தயாரிப்பு நிறுவனத்தோடு ஒத்துழைக்காத காரணத்தால் படத்திலிருந்து நீக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. படத்திலிருந்து விலகியது குறித்து அமலாபால் விளக்கமளித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒத்துழைக்காததால் வெளியேற்றப்பட்டேன். இதற்கு முன் தயாரிப்பு நிறுவனத்துடன் பிரச்னை என்று புகார் வந்துள்ளதா? #VSP33 படத்துக்கு காஸ்டியூம்கள் வாங்க மும்பை வந்தேன். அதுவும் என் சொந்த செலவில். பட்ஜெட் கெடுபிடி என தயாரிப்பு நிறுவனம் புலம்புவதால் இந்த முடிவு. தங்க இடம் கேட்டதுதான் என்னை வெளியேற்றக் காரணம் என்பது ஆராய்ந்தபோதுதான் தெரிந்தது.

தயாரிப்பாளர் ரத்தினவேல்குமார் இதுகுறித்து எனக்குப் போன் செய்யாமல், என்னை மாற்ற வேண்டும் என முடிவெடுத்து " உங்களுடன் வேலை செய்ய விருப்பம் இல்லை" என ஒரு மெசேஜ் மட்டும் அனுப்பி வைக்கிறார். எனக்குக் களங்கம் ஏற்படுத்தவே பல புரளிகளை தயாரிப்பு நிறுவனம் பரப்பி வருகிறது " எனக் கூறியுள்ளார்.

மேலும், பின்குறிப்பில் " இதற்கும் விஜய்சேதுபதிக்கும் சம்மந்தம் இல்லை. விஜய் சேதுபதியுடன் நடிப்பதில் ஆவலாக இருந்தேன். என் மேல் தயாரிப்பு நிறுவனம் எடுத்து வைக்கும் பல வதந்திகளுக்குப் பதிலளிக்கும் வகையில் தான் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன் " எனவும் கூறியுள்ளார்

banner

Related Stories

Related Stories