சினிமா

“சூர்யாவின் அன்பான ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி” - ஸ்டுடியோ க்ரீன் அறிவிப்பு

என்.ஜி.கே ரிலீஸ், காப்பான் டீசர் , சூரரைப் போற்று ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பை தொடர்ந்து அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்து வருகிறார் நடிகர் சூர்யா.

“சூர்யாவின் அன்பான ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி” - ஸ்டுடியோ க்ரீன் அறிவிப்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே.’ படம் மே 31ல் வெளிவருகிறது. இதில், சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அதேபோல், சமீபத்தில் கே.வி. ஆனந்த இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காப்பான்’ படத்தின் டீசரும், சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க இருக்கும் ‘சூரரைப் போற்று’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு வரவேற்பையும், இன்ப அதிர்ச்சியையும் அளித்துள்ளார் நடிகர் சூர்யா.

இதனையடுத்து, பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.இ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சூர்யாவின் 39வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், ” “நடிகர் சூர்யாவின் 39வது படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இந்த கூட்டணி மூலம் சூர்யாவின் அன்பு ரசிகர்களுக்கு திருவிழாவாக அமையும்” என பதிவிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories