உலகம்
8 கார்கள் - 7 நகரங்கள் : விமானக் கட்டணத்தைத் தவிர்க்க சீன இளைஞர் செய்த அதிர்ச்சி சம்பவம்!
சீனாவில், அடுத்தடுத்து கார்கள் திருடுபோவதாக போலிஸாருக்கு தொடர் புகார்கள் வந்துள்ளது. இது குறித்து போலிஸார் தங்களது விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.
ஹெபெய் மாகாணத்தில், சந்தேகத்திற்கு இடமாக கார் ஒன்று சாலையின் ஓரமாக இருந்துள்ளது. இதற்குள் இளைஞர் ஒருவர் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். பின்னர் போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அவர், முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் அந்த இளைஞர் மீது மேலும் சந்தேகம் எழுந்தது. மேலும் அவர் பயன்படுத்திய கார், காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் வந்ததும் போலிஸார் கவனத்திற்கு வந்துள்ளது.
உடேன, அந்த இளைஞரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், அந்த இளைஞர் ஹுனான் மாகாணத்தில் உள்ள சாங்ஷாவுக்கு செல்ல விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றுள்ளார். ஆனால் அதிக பணம் செலவு ஆகும் என்பதால் அவருக்கு ஒரு யோசனை தோற்றியுள்ளது.
அதன்படி ஒவ்வொரு மாகாணத்திலும் கார்களை திருடி எரிபொருள் தீர்ந்ததும், காரை அங்கியே நிறுத்திவிட்டு வேறுகாரை திருடி சென்றுள்ளார். இப்படி 8 கார்களை வரை அவர் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சீன சட்டத்தின்படி கார்களை திருடினால் 10 ஆண்டுகள் சிறைதண்டனை உள்ளது.
Also Read
-
“ரயில்வே துறையை ஒழித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
5 மாநில தேர்தல் : ஆட்சியை பிடிக்கப்போவது யார்? : வெளியான Exit Polls முடிவுகள்!
-
தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க கூட்டணியே ஆட்சி அமைக்கும்: உறுதி செய்த Exit Polls முடிவுகள்!
-
இஸ்லாமியச் சிறுமிக்கு இந்து பெற்றோர் : உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!
-
பா.ஜ.க ஆளும் மாநிலத்தின் அவலம் - உயிருக்குப் போராடிய கணவர்: மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!