உலகம்
4 பணயக்கைதிகள் மீட்க 274 பாலஸ்தீனிய பொதுமக்களை கொன்ற இஸ்ரேல் : உலகநாடுகள் கண்டனம் !
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.
ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் ராணுவத்தை அனுப்பியுள்ளது. அதோடு இஸ்ரேல் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் காசாவின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போதைய நிலையில், 90 சதவீத காசாவின் பரப்பு இஸ்ரேலில் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தாக்குதல் இதுவரை 36 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், நான்கு இஸ்ரேலிய பணயக்கைதிகள் மீட்க இஸ்ரேலிய படைகள் மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் 274 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை குற்றம் சாட்டியுள்ளது. நுஸ்ரத் அகதிகள் முகாமுக்கு அருகில் இஸ்ரேலிய பணயகைதிகள் வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் உளவுத்துறை தனது ராணுவத்துக்கு தகவல் அளித்துள்ளது.
அதன்படி அவர்களை மீட்க இஸ்ரேல் படைகள் சிறப்பு தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதலில்போது இஸ்ரேலிய படைகளுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே தீவிர தாக்குதல் நடந்துள்ளது. அப்போது இஸ்ரேலிய ராணுவத்தினர் வான்வழித் தாக்குதலில் 74 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பின் காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
எனினும் இந்த தாக்குதல் மூலம் ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த 4 பணயக்கைதிகள் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் சார்பில் கூறப்பட்டுள்ளது. அதே நேரம் இந்த தாக்குதலில் 100-க்கும் குறைவானவர்களே கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!