உலகம்
9 மாதம் பாலியல் தொல்லை.. பேய்தான் என நினைத்த இளம் பெண்ணுக்கு உண்மையை சொன்ன CCTV!
சிங்கப்பூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது காதலனுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது அந்த வீட்டின் உரிமையாளர் இந்த வீட்டில் பேய்கள் நடமாட்டம் இருப்பதாகவும், இதற்காகத் தாய்லாந்து சென்று மாந்திரீக பரிகாரம் செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இதை இவர்கள் நம்பியுள்ளனர். மேலும் இந்த பெண் தூக்கும் போது அவருக்கு யாரோ ஒருவர் முத்தம் கொடுத்து அவரது உடல் பாகங்களைத் தொட்டுப் பார்ப்பதுபோல் இருந்துள்ளது. முதலில் இது காதலன் என நினைத்துள்ளார்.
ஆனால், தினமும் இதேபோன்று நடந்ததால் இது பேய்களின் வேலையாக இருக்குமோ என நினைத்து அச்சமடைந்துள்ளார். இதையடுத்து வீட்டில் சிசிடிவி காட்சிகளை வைத்துள்ளனர். அப்போதுதான் அது பேய் அல்ல வீட்டின் உரிமையாளர் என்பது தெரியவந்தது.
இது குறித்து அந்த பெண் போலிஸாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வீட்டின் உரிமையாளரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
பூட்டான் சுகாதார அமைச்சகத்தில் பணிபுரிய செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!
-
தேர்தல் ஆணையத்தின் SIR... பாஜக, அதிமுக தவிர்த்த தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு !
-
"இந்த ஆண்டு 1 லட்சத்து 98 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது" - தஞ்சாவூர் ஆட்சியர் !
-
"நேரடி நியமனம் : "ஒன்றிய அரசின் களங்கம் கற்பிக்கும் முயற்சி வெற்றி பெறாது" - அமைச்சர் KN நேரு விளக்கம் !
-
“பழனிசாமியிடம் துரோகத்தை தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளாசல் !