உலகம்
கொரோனா மானியம் பெற மோசடி செய்த பெண்.. 16 மாதம் சிறைத் தண்டனை வழங்கிய சிங்கப்பூர் நீதிமன்றம்!
சிங்கப்பூரைச் சேர்ந்தவர் ராஜ்போல் மாலினி. இந்திய வம்சாவளியான இவர் கடந்த ஆண்டு ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் பரவிய கொரோனா தொற்று காரணமாக தனக்கு வேலை பறிபோனதாக கூறி கொரோனா மானியம் பெற்று மோசடி செய்துள்ளார்.மேலும், இவர் வேலை பார்த்து வந்த கட்டுமான நிறுவனத்தில் 4 ஆயிரம் சிங்கப்பூர் டாலரைத் திருடியுள்ளார்.
இந்த மோசடிகள் தொடர்பாக போலிஸார் மாலினியைக் கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு விசாரணை சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன் இறுதி விசாரணையில் கொரோனா மானியத்திற்காக இவர் கொடுத்த பணி நீக்கக் கடிதம் போலியானது என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்டுமான நிறுவனத்தின் பணத்தையும் கையாடல் செய்துள்ளதும் ஆதாரங்களுடன் போலிஸார் நிரூபித்துள்ளனர் என கூறி மாலிக்கு 16 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Also Read
-
விதிமீறல்களுக்கு பெயர்போன பா.ஜ.க! : நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம்!
-
பாகிஸ்தான் உதவியை நாடும் பா.ஜ.க! : தேர்தல் விதிமுறைகளை தகர்க்கும் மோடி அரசு!
-
குற்றவாளிகளுக்கு தரப்படும் ஜாமீன், முதல்வர்களுக்கு மறுக்கப்படுகிறது : பா.ஜ.க.வின் அடக்குமுறை அரசியல்!
-
”திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் மனங்களில் தாண்டவமாடும் மகிழ்ச்சி” : கி.வீரமணி வாழ்த்து!
-
”அரசியல் சாசனம் இல்லாமல் நாட்டை ஆட்சி செய்ய நினைக்கும் மோடி” : ராகுல் காந்தி தாக்கு!