உலகம்
“இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே..?” : போலி கையில் தடுப்பூசி செலுத்தி சான்றிதழ் பெற முயன்ற நபரால் அதிர்ச்சி!
இத்தாலியில் போலி கையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டு சான்றிதழ் பெற முயன்ற சுகாதார ஊழியர் சிக்கியுள்ளார்.
உலகின் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டில் சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு இத்தாலியில் உள்ள பையில்லா பகுதியைச் சேர்ந்த 50 வயது கொண்ட சுகாதாரப் பணியாளர் ஒருவர், தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பமில்லாமல் இருந்து வந்துள்ளார்.
ஆனால் அவருக்கு பணிச்சூழல் காரணமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் தேவைப்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமலேயே சான்றிதழ் பெற திட்டம் போட்டுள்ளார்.
இதற்காக சிலிக்கான் மோல்டினால் ஆன போலி கையை உருவாக்கியுள்ளார். அதனை தன் கையின் மேல் வைத்துக்கொண்டு, தடுப்பூசி செலுத்திக்கொள்ளச் சென்றுள்ளார்.
தடுப்பூசி போடும் செவிலியர், அவரது கைப்பகுதியில் உள்ள சட்டையை நீக்கிவிட்டு கைகளைத் தொட்டபோது, அவரது தோல் ரப்பரைப் போன்றும், குளிர்ச்சியாகவும் இருந்தை உணர்ந்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்து பரிசோதித்ததில் அது சிலிக்கானில் செய்யப்பட்ட போலி கை என்பது தெரியவந்துள்ளது. உண்மையைக் கண்டுபிடித்த பின், வெளியில் சொல்லவேண்டாம் என அந்த நபர் செவிலியரை கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால் செவிலியர், அந்த நபரின் மோசடி குறித்துக் காவல்துறையிடம் புகார் அளித்தார். காவல்துறையினர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டதால் போலி கையில் தடுப்பூசி செலுத்தி சான்றிதழ் பெற முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”நிதியும் கிடையாது நீதியும் கிடையாது - தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இந்திய அரசியலில் மத வெறுப்பு அதிகரித்துள்ளது...” - நடிகை வித்யா பாலன் ஓபன் டாக் !
-
குஜராத் மாநிலத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு : தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த பா.ஜ.க வேட்பாளர்கள்!
-
கொளுந்துவிட்டு எரிந்த கட்டடம்... யோசிக்காமல் 50 பேரின் உயிரை காப்பாற்றிய துணிகர சிறுவனுக்கு பாராட்டுகள் !
-
”கொஞ்சம் கூட கருணை இல்லாத மோடி அரசு” : செல்வப்பெருந்தகை விமர்சனம்!