உலகம்
"ஒரு நாள் முழுக்க காதில் குடியிருந்த சிலந்தி" : மருத்துவமனை சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
சீனாவின் ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் 'யி'. இளம்பெண்ணான இவரது காதில் திடீரென ஏதோ சத்தம் கேட்டுக் கொண்டே இருந்துள்ளது. மேலும் கடுமையான வலியும் ஏற்பட்டுள்ளது.
முதல்முறையாக இதுபோன்று உணர்ந்ததால் அந்தப் பெண் உடனே மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் காதில் அடைப்பு ஏற்பட்டுள்ளதை முதலில் கண்டுபிடித்தனர்.
பிறகு, அவரது காதில் ஒரு படக்கருவியைப் பொருத்திப் பரிசோதித்துப் பார்த்தபோது காதுச் சவ்வின் மேற்பரப்பில் சிலந்தி ஒன்று ஊர்ந்து செல்வதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், மருத்துவர்கள் எலக்ட்ரிக் ஓட்டோஸ்கோப் என்ற கருவியைக் காதுக்குள் செலுத்தி சிலந்திப்பூச்சியை வெளியே எடுத்தனர். இதையடுத்து அந்த பெண்ணுக்கு வலி ஏற்படுவது நின்றது.
இதுபோன்று சீனாவில் 2019ஆம் ஆண்டு இளைஞர் ஒருவரின் காதில் நீண்ட நாட்களாக சிலந்தி ஒன்று இருந்து கூடு கட்டி இருந்ததை அறிந்து, மருத்துவர்கள் அகற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!