உலகம்
"ஒரு நாள் முழுக்க காதில் குடியிருந்த சிலந்தி" : மருத்துவமனை சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
சீனாவின் ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் 'யி'. இளம்பெண்ணான இவரது காதில் திடீரென ஏதோ சத்தம் கேட்டுக் கொண்டே இருந்துள்ளது. மேலும் கடுமையான வலியும் ஏற்பட்டுள்ளது.
முதல்முறையாக இதுபோன்று உணர்ந்ததால் அந்தப் பெண் உடனே மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் காதில் அடைப்பு ஏற்பட்டுள்ளதை முதலில் கண்டுபிடித்தனர்.
பிறகு, அவரது காதில் ஒரு படக்கருவியைப் பொருத்திப் பரிசோதித்துப் பார்த்தபோது காதுச் சவ்வின் மேற்பரப்பில் சிலந்தி ஒன்று ஊர்ந்து செல்வதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், மருத்துவர்கள் எலக்ட்ரிக் ஓட்டோஸ்கோப் என்ற கருவியைக் காதுக்குள் செலுத்தி சிலந்திப்பூச்சியை வெளியே எடுத்தனர். இதையடுத்து அந்த பெண்ணுக்கு வலி ஏற்படுவது நின்றது.
இதுபோன்று சீனாவில் 2019ஆம் ஆண்டு இளைஞர் ஒருவரின் காதில் நீண்ட நாட்களாக சிலந்தி ஒன்று இருந்து கூடு கட்டி இருந்ததை அறிந்து, மருத்துவர்கள் அகற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.3 ஆயிரத்துடன் கூடிய தமிழர் திருநாள் ‘பொங்கல்’ பரிசுத் தொகுப்பு! : திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்!
-
“‘தான் திருடி, பிறரை நம்பார்’ என்பதைப் போன்றவர்தான் எடப்பாடி பழனிசாமி!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை கண்டு ஒப்பாரி ஓலமிடும் பழனிசாமி : அமைச்சர் ரகுபதிக்கு பதிலடி!