உலகம்
"ஒரு நாள் முழுக்க காதில் குடியிருந்த சிலந்தி" : மருத்துவமனை சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
சீனாவின் ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் 'யி'. இளம்பெண்ணான இவரது காதில் திடீரென ஏதோ சத்தம் கேட்டுக் கொண்டே இருந்துள்ளது. மேலும் கடுமையான வலியும் ஏற்பட்டுள்ளது.
முதல்முறையாக இதுபோன்று உணர்ந்ததால் அந்தப் பெண் உடனே மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் காதில் அடைப்பு ஏற்பட்டுள்ளதை முதலில் கண்டுபிடித்தனர்.
பிறகு, அவரது காதில் ஒரு படக்கருவியைப் பொருத்திப் பரிசோதித்துப் பார்த்தபோது காதுச் சவ்வின் மேற்பரப்பில் சிலந்தி ஒன்று ஊர்ந்து செல்வதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், மருத்துவர்கள் எலக்ட்ரிக் ஓட்டோஸ்கோப் என்ற கருவியைக் காதுக்குள் செலுத்தி சிலந்திப்பூச்சியை வெளியே எடுத்தனர். இதையடுத்து அந்த பெண்ணுக்கு வலி ஏற்படுவது நின்றது.
இதுபோன்று சீனாவில் 2019ஆம் ஆண்டு இளைஞர் ஒருவரின் காதில் நீண்ட நாட்களாக சிலந்தி ஒன்று இருந்து கூடு கட்டி இருந்ததை அறிந்து, மருத்துவர்கள் அகற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“த.வெ.க அரசு காப்பி பேஸ்ட் அரசு ; ஆளுநர் உரையை வன்மையாகக் கண்டிக்கிறோம்” : உதயநிதி ஸ்டாலின் முழு பேட்டி!
-
திருவாரூரில் இளம் பெண்ணிடம் ஈவ்டீசிங் : த.வெ.க ஒன்றிய செயலாளர் உட்பட இருவர் கைது!
-
வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து 5 சவரன் நகை பறிப்பு: எடப்பாடியில் பரபரப்பு!
-
“கூச்ச நாச்சமற்று சட்டமன்ற மரபுகளை அடமானம் வைக்கும் த.வெ.க அரசு” : தி.மு.க IT WING கண்டனம்!
-
“ஒரு மாதத்தில் 175 பாலியல் வன்கொடுமைகள், 56 கொலைகள் நடந்தும் வாய் திறக்காத CM!” : உதயநிதி குற்றச்சாட்டு!