உலகம்
தேவாலயத்தில் இங்கிலாந்து MP குத்திக் கொலை... இளைஞரின் வெறிச் செயல்!
இங்கிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினரான டேவிட் அமெஸ் இன்று எசக்ஸ் பகுதியில் உள்ள பெல்ஃபேர்ஸ் மெத்தடிஸ்ட் தேவாலயத்துக்குச் சென்றிருந்தார்.
அப்போது, அங்கிருந்து மக்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென இளைஞர் ஒருவர் டெவிட் அமெஸை கத்தியால் குத்தினார். அதனால் மக்கள் அதிர்ச்சியடைந்து ஓடினர்.
அவரது பாதுகாவலர்கள் தடுப்பதற்குள் அந்த இளைஞர் டேவிட் அமெஸை பல முறை கத்தியால் குத்தினார். பின்னர் அந்த மர்ம நபரை அவரது பாதுகாவலர்கள் தடுத்தனர். பிறகு டேவிட் அமெஸை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
பிடிபட்ட இளைஞரிடம் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட டேவிட் அமெஸ் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !
-
பிரசாரத்தின்போது மோடி முகத்தை மறைத்த வேட்பாளர்... மோடி கொடுத்த Ultimate Reaction - பின்னணி என்ன?
-
அவர் நட்சத்திர வீரர், இவர் இளம் வீரர் என்பதால் புறக்கணித்துள்ளனர் - தேர்வு குழுவை விமர்சித்த சேவாக் !