உலகம்
தேவாலயத்தில் இங்கிலாந்து MP குத்திக் கொலை... இளைஞரின் வெறிச் செயல்!
இங்கிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினரான டேவிட் அமெஸ் இன்று எசக்ஸ் பகுதியில் உள்ள பெல்ஃபேர்ஸ் மெத்தடிஸ்ட் தேவாலயத்துக்குச் சென்றிருந்தார்.
அப்போது, அங்கிருந்து மக்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென இளைஞர் ஒருவர் டெவிட் அமெஸை கத்தியால் குத்தினார். அதனால் மக்கள் அதிர்ச்சியடைந்து ஓடினர்.
அவரது பாதுகாவலர்கள் தடுப்பதற்குள் அந்த இளைஞர் டேவிட் அமெஸை பல முறை கத்தியால் குத்தினார். பின்னர் அந்த மர்ம நபரை அவரது பாதுகாவலர்கள் தடுத்தனர். பிறகு டேவிட் அமெஸை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
பிடிபட்ட இளைஞரிடம் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட டேவிட் அமெஸ் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
இந்தியாவில் 67% பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் : வெளியான அதிர்ச்சி அறிக்கை!
-
நாடாளுமன்றத்தின் அலுவல் தொடர்பிற்கு ஏன் இந்தி மொழி ஆதிக்கம்? : துரை வைகோ எம்.பி கண்டனம்!
-
ஜவுளி ஏற்றுமதி : குஜராத்தை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முதலிடம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
“தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால்; தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள்!” - முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
‘கொடநாடு’ என்று சொன்னாலே குலை நடுக்கம் ஏற்படும் பழனிசாமிக்கு! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!