உலகம்
“கொரோனாவின் தாக்கத்தால் 2030-ல் 100 கோடி பேர் கொடிய வறுமையில் தள்ளப்படுவார்கள்” : ஐ.நா எச்சரிக்கை!
கொரோனா வைரஸ் தொற்றால் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமையில் வாழ்வோர் எண்ணிக்கை 100 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று ஐ.நா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மக்களின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்டுத்திய பல்வேறு விளைவுகளை ஐ.நா மதிப்பீடு செய்து வந்த நிலையில், கொரோனா தாக்கத்தின் நீண்ட கால விளைவுகளையும் மதிப்பீடு செய்யப்பட்டது.
அதன்படி, கொரோனா வைரஸின் தாக்கத்தால் 2030ம் ஆண்டுக்குள் கூடுதலாக 20.70 கோடி மக்கள் கடும் வறுமையில் தள்ளப்படலாம். இதன் காரணமாக 2030-ம் ஆண்டுக்குள் கொடிய வறுமையில் வாழ்வோர் எண்ணிக்கை 100 கோடிக்கும் அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனாவால் தூண்டப்பட்ட பொருளாதார நெருக்கடியின் 80 சதவீதம், உற்பத்தித்திறன் இழப்பு காரணமாக 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!