உலகம்
“கொரோனாவின் தாக்கத்தால் 2030-ல் 100 கோடி பேர் கொடிய வறுமையில் தள்ளப்படுவார்கள்” : ஐ.நா எச்சரிக்கை!
கொரோனா வைரஸ் தொற்றால் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமையில் வாழ்வோர் எண்ணிக்கை 100 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று ஐ.நா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மக்களின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்டுத்திய பல்வேறு விளைவுகளை ஐ.நா மதிப்பீடு செய்து வந்த நிலையில், கொரோனா தாக்கத்தின் நீண்ட கால விளைவுகளையும் மதிப்பீடு செய்யப்பட்டது.
அதன்படி, கொரோனா வைரஸின் தாக்கத்தால் 2030ம் ஆண்டுக்குள் கூடுதலாக 20.70 கோடி மக்கள் கடும் வறுமையில் தள்ளப்படலாம். இதன் காரணமாக 2030-ம் ஆண்டுக்குள் கொடிய வறுமையில் வாழ்வோர் எண்ணிக்கை 100 கோடிக்கும் அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனாவால் தூண்டப்பட்ட பொருளாதார நெருக்கடியின் 80 சதவீதம், உற்பத்தித்திறன் இழப்பு காரணமாக 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
ரூ.718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடியது VB-G RAM G முன் வடிவு!” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள், இதுவரை சுமார் ரூ.690 கோடிக்கு விற்பனை!” : துணை முதலமைச்சர்!
-
“பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!