Viral
போலிஸ் காரை திருடி Selfie எடுத்து வெளியிட்ட வாலிபர் : குஜராத்தில் நடந்தது என்ன?
குஜராத் மாநிலம் துவாராக பகுதியில் காவல் நிலையம் ஒன்று உள்ளது. அங்கு கடந்த 28ம் தேதி போலிஸ் கார் நிறுத்தப்பட்டிருந்தது. பிறகு சிறிது நேரம் கழித்து காரை எடுக்க வெளியே வந்த போலிஸார் கார் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பிறகு காவல் நிலையத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் காரை எடுத்துச் சென்றது பதிவாகி இருந்தது. இது குறித்து அருகே இருந்த காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
பின்னர் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை தொடங்கிய போலிஸார் 6 மணி நேரத்திற்குள் திருடப்பட்ட காரை கண்டுபிடித்தனர். பிறகு காரை திருடிச் சென்ற நபரையும் பிடித்து விசாரித்தனர்.
அப்போது, அவர் பெயர் மோகித் சர்மா என்று தெரியவந்தது. காரை எடுத்துச் சென்ற அவர் 200 கிலோ மீட்டர் வரை ஓட்டிச் சென்றுள்ளார். பின்னர் திருடப்பட்ட போலிஸ் வாகனத்துடன் செல்ஃபி எடுத்து அதை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலிஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு கூட கர்நாடகாவில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. போலிஸ் காரை ஓட்டிப்பார்க்க வேண்டும் என்ற ஆசையை இளைஞர் ஒருவர் போலிஸ் ஜீப்பைத் திருடிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“முதுகெலும்பில்லா ஆட்சி தமிழ்நாட்டில் தொடர வேண்டுமா CM sir?” : அப்பாவு கடும் கண்டனம்!
-
குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையால் வந்த வினை : கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!