Viral
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூத்துக்குலுங்கும் குறிஞ்சி பூக்கள்.. (படங்கள்)
கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் மாவட்டம் சிக்கமகளூருவில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சந்திரதிரிகோண மலை. இந்த மலைப்பகுதியில் அதிகப்படியான காபி தோட்டங்கள், இயற்கை எழில் கொஞ்சும் அழகும் நிறைந்து காணப்படுகிறது.
பாபாபுடன் கிரி, முல்லையன் கிரி, மாணிக்கதாரா, ஒன்னம்மன் அருவிகள் இங்கு உள்ளது. இந்த நிலையில் சந்திர திரிகோண மலைப்பகுதியில் நீல வண்ண நிறத்திலான குறிஞ்சி பூக்கள் பூத்து குலுங்கியுள்ளது. இந்த குறிஞ்சி பூக்கள் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பூக்கும்.
குவியும் சுற்றுலா பயணிகள் இதையறிந்த சுற்றுலா பயணிகள், சந்திர திரிகோண மலைக்கு படையெடுத்து வந்து குறிஞ்சி பூக்களை கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும் குடும்பமாக நின்று தங்கள் செல்போன்களில் படம் எடுத்து மகிழ்கின்றனர்.
இந்த பூக்கள் 15 நாட்கள் மட்டுமே பூக்கும் என்பதால் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு செல்வதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மூடிகெரே தாலுகா தேவரமனே மலைப்பகுதியில் குறிஞ்சி பூக்கள் பூத்தது. இந்தாண்டு சந்திரதிரிகோண மலைப்பகுதியில் பூத்து குலுங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
Also Read
-
“வாக்களிக்காத மக்களும் வாக்களிக்காமல் போய்விட்டோமே என்று வருத்தப்படுகின்றனர்” - துணை முதலமைச்சர் பேச்சு!
-
வேளாண் விளைபொருட்களுக்கான மதிப்புக்கூட்டும் மையங்கள்.. ரூ.1.50 கோடி மானியம்.. அமைச்சர் MRK பன்னீர்செல்வம்
-
“எதிர்காலத்தில் 2030க்குள் AIDS தொற்றில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
ஒரே இடத்தில் ரேஷன் கார்டு சேவைகள்.. சென்னையில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் - எப்போது?
-
காஞ்சிபுரத்தில் 7,297 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள்.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!