Viral
கேரளாவில் ரூ.47,000க்கு ஏலம் போன பூசணிக்காய் - அப்படி என்ன ஸ்பெஷல் ?
கேரளாவில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டப்படும். சில இடங்களில் ஓணம் பண்டிக்கை அன்று தங்கள் வீட்டில் வளர்க்கும் கால்நடைகள் மற்றும் தோட்டத்தில் விளைவித்த காய்கறி, பழங்களை ஏலம் விட்டும் பண்டிகையை கொண்டாடி வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்தவகையில், ஓணம் பண்டிகை அன்று இடுக்கி மாவட்டத்தில் உள்ள செம்மன்னாரி என்ற கிராமத்தில் பொது ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தின் போது, ஆடு, கோழி, மாடு மற்றும் காய்கறிகள் என ஆர்வமுடன் ஏலம் சென்றது.
இதில் ஜார்ஜ் என்பவர் தனது வீட்டில் விளைந்த 5 கிலோ கொண்ட பூசணிக்காய்யை ஏலத்தில் விட்டார். ஆரம்ப விலை ரூ.5000 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஏலத்தில் பூசணிக்காயின் விலை உயர்ந்துக்கொண்டே போனது. இறுதியாக அதேபகுதியைச் சேர்ந்த சிபி என்பவர் ரூ.47,000க்கு பூசணிக்காயை ஏலம் எடுத்து வெற்றிப்பெற்றார்.
போட்டிப்போட்டு ஏலம் எடுத்ததில் முதல் முறையாக ஒரு பூசணிக்காயை 47 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!
-
“தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி!” : முதலீடுகளை ஈர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
தொடர்ந்து 4 நாட்களாக சசிகாந்த் உண்ணாவிரத போராட்டம்.. முதலமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க போராட்டம் முடிவு!
-
"நயினார் நாகேந்திரன் தேவையில்லாமல் வாயை கொடுத்து மாட்டிக்கொள்கிறார்" - அமைச்சர் TRB ராஜா பதிலடி !