Viral
குறும்படம் தயாரிக்க அதிக பணத்தை செலவு செய்த தந்தை.. தட்டிக்கேட்ட மகனுக்கு கத்திக்குத்து - பகீர் சம்பவம்!
சென்னை பூந்தமல்லி அடுத்த திருமழிசை ஒலிம்பியா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (62 ). இவர் அதிகமாக பணத்தை குறும்படம் தயாரிப்பதற்கும், ரியல் எஸ்டேட் செய்வதற்கும் பணத்தை செலவு செய்து வந்துள்ளார்.
இது தொடர்பாக மகன் அவரை தட்டி கேட்டு உள்ளார். இருவருக்குள்ளே ஏற்பட்ட மோதலில் தந்தை காய்கறி நறுக்கும் கத்தி எடுத்து மகன் கழுத்தில் குத்தி உள்ளார். படுகாயம் அடைந்த மகன் ஹிந்து பிரகாஷ் தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்.
மகனை கத்தியால் குத்திய தந்தை பிரகாஷை வெள்ளவேடு போலீசார் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர். குறும்படம் தயாரிக்க அதிக பணம் செலவு செய்த தந்தையை தட்டி கேட்ட மகனை தந்தை கத்தியால் குத்திய சம்பவம் திருமழிசை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு... : த.வெ.க அரசை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வாயில் புண் வந்துவிட்டதா? : காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய DMK IT Wing!
-
‘RCB பெயர் இல்லை Brand.. 19 வருட வரலாற்றிலேயே முதல் முறையாக 30 கோடி அமெரிக்க டாலர்!’ - முழு விவரம் உள்ளே!
-
6 இலட்சம் நூல்கள் - வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு... : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தின் பெயரையும் மாற்றும் த.வெ.க! : பெயர் மாற்றி ‘ஏமாற்றும்’ அவலம்!