Viral
‘என்னை போலிஸ் தொல்லை பண்றாங்க..’ : கஞ்சா போதையில் கமிஷனர் அலுவலகத்தில் கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர் !
சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கடந்த பல மாதங்களாக கஞ்சாவிற்கு அடிமையாகி இருப்பதாகத் தெரிகிறது. இதன் காரணமாக அவர், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் , சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கஞ்சா போதையில் அரைநிர்வாணமாக நுழைந்த சீனிவாசன் தான் வைத்திருந்த பிளேடால் தனது மார்பு மற்றும் கழுத்து பகுதிகளில் தன்னைத் தானே அறுத்துக் கொண்டு கதறியிருக்கிறார்.
தன்னை காவல்துறையினர் நிம்மதியாக வாழ விடுவதில்லை என்றும் கூச்சல் போட்டிருக்கிறார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவல் அதிகாரிகள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காவல் ஆணையர் அலுவலகத்திலேயே, இளைஞர் ஒருவர் பிளேடால் தன் கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!