Viral
‘என்னை போலிஸ் தொல்லை பண்றாங்க..’ : கஞ்சா போதையில் கமிஷனர் அலுவலகத்தில் கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர் !
சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கடந்த பல மாதங்களாக கஞ்சாவிற்கு அடிமையாகி இருப்பதாகத் தெரிகிறது. இதன் காரணமாக அவர், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் , சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கஞ்சா போதையில் அரைநிர்வாணமாக நுழைந்த சீனிவாசன் தான் வைத்திருந்த பிளேடால் தனது மார்பு மற்றும் கழுத்து பகுதிகளில் தன்னைத் தானே அறுத்துக் கொண்டு கதறியிருக்கிறார்.
தன்னை காவல்துறையினர் நிம்மதியாக வாழ விடுவதில்லை என்றும் கூச்சல் போட்டிருக்கிறார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவல் அதிகாரிகள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காவல் ஆணையர் அலுவலகத்திலேயே, இளைஞர் ஒருவர் பிளேடால் தன் கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!