Viral
‘என்னை போலிஸ் தொல்லை பண்றாங்க..’ : கஞ்சா போதையில் கமிஷனர் அலுவலகத்தில் கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர் !
சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கடந்த பல மாதங்களாக கஞ்சாவிற்கு அடிமையாகி இருப்பதாகத் தெரிகிறது. இதன் காரணமாக அவர், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் , சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கஞ்சா போதையில் அரைநிர்வாணமாக நுழைந்த சீனிவாசன் தான் வைத்திருந்த பிளேடால் தனது மார்பு மற்றும் கழுத்து பகுதிகளில் தன்னைத் தானே அறுத்துக் கொண்டு கதறியிருக்கிறார்.
தன்னை காவல்துறையினர் நிம்மதியாக வாழ விடுவதில்லை என்றும் கூச்சல் போட்டிருக்கிறார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவல் அதிகாரிகள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காவல் ஆணையர் அலுவலகத்திலேயே, இளைஞர் ஒருவர் பிளேடால் தன் கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read
-
“காவிரி நீரை மறந்துவிட வேண்டியது தான்!” : த.வெ.க ஆட்சிக்கு முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“ஏழை மாணவர்களின் பசி போக்கிய காலை உணவுத் திட்டம்.. திராவிட நாயகர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வை”
-
இது பற்றி பேசக்கூடாது என்றால் என்ன நியாயம்? : த.வெ.க அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேள்வி!
-
“த.வெ.க ஆட்சியில் தொடர் கதையாகும் பாலியல் தொல்லைகள்” : அனிதா ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்!
-
“சிங்கப்பெண் படை தொடக்கத்திற்கு பின்னும்.. தொடரும் பாலியல் குற்றங்கள்.. தூங்குகிறாரா முதல்வர் விஜய்!”