Viral
‘என்னை போலிஸ் தொல்லை பண்றாங்க..’ : கஞ்சா போதையில் கமிஷனர் அலுவலகத்தில் கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர் !
சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கடந்த பல மாதங்களாக கஞ்சாவிற்கு அடிமையாகி இருப்பதாகத் தெரிகிறது. இதன் காரணமாக அவர், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் , சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கஞ்சா போதையில் அரைநிர்வாணமாக நுழைந்த சீனிவாசன் தான் வைத்திருந்த பிளேடால் தனது மார்பு மற்றும் கழுத்து பகுதிகளில் தன்னைத் தானே அறுத்துக் கொண்டு கதறியிருக்கிறார்.
தன்னை காவல்துறையினர் நிம்மதியாக வாழ விடுவதில்லை என்றும் கூச்சல் போட்டிருக்கிறார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவல் அதிகாரிகள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காவல் ஆணையர் அலுவலகத்திலேயே, இளைஞர் ஒருவர் பிளேடால் தன் கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!