Viral
‘குடிக்க காசு தரமாட்டியா, அப்போ செத்துப் போ..’ : குடி வெறியில் தந்தையைக் கொன்ற மகன் - அதிர்ச்சி வீடியோ
ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள சந்திரலபாடு என்ற கிராமத்தில் மெஹபூர் சாஹிப் என்ற 70 வயது முதியவை பெற்ற மகனே கொலை செய்ய முயற்சித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசின் முதியோர் பென்ஷனை பெற்று வரும் மெஹபூர் சாஹிப்பிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார் அவரது மகன் ஷேக் ஷீலாத். ஆனால், பணத்தைக் கொடுத்தால் அதை மது குடித்து வீணாக்கி விடுவார் என்பதால் சாஹிப் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆத்திரமடைந்த ஷேக், தந்தையின் கழுத்தை நெறித்து கொல்ல முயற்சித்திருக்கிறார். அப்போது அவரது தாய் கதறி அழுதும் மனம் இறங்காமல், ‘காசு தரமாட்டியா.. அப்போ செத்துப்போ..’ என போதையின் உச்சியில் முதியவர் சாஹிப்பின் கழுத்தை நெறித்துள்ளார்.
பின்னர் மயக்கமடைந்த முதியவர் சாஹிப்பை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, சிகிச்சை பலனழிக்காமல் சாஹிப் உயிரிழந்தார்.
முன்னதாக தனது தந்தையை கொல்ல முயன்ற ஷேக்கின் செய்கையை செல்போனில் வீடியோ எடுத்து போலீசிடம் புகாரளித்துள்ளார் சாஹிப்பின் மகள். இதனையடுத்து, போலீசார் ஷேக் ஷீலத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், வயதான தந்தையை மகனே கழுத்தை நெறித்து கொல்ல முயற்சிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது, அது பார்ப்போரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
Also Read
-
“கிண்டியில ஒருத்தர் நமக்காக பிரச்சாரத்தை தொடங்கிட்டாரு..” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலகல!
-
ஜி.டி.நாயுடு பாலம் : மோடிக்கு நன்றியா? - போலி பிரசாரம் செய்யும் பாஜக... அம்பலப்படுத்திய TN Fact Check!
-
“தமிழ்நாடு இரத்ததானத்தில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது!” : தேசிய இரத்த தான நாளில் அமைச்சர் மா.சு பேச்சு!
-
“10,000 கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் உரையாடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!” : ககன்தீப் சிங் தகவல்!
-
நமக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!