Viral
“சென்னையை மழை தான் காப்பாற்ற வேண்டும்” : பிரபல ஹாலிவுட் நடிகர் வேதனை!
மழையால் மட்டுமே சென்னையைக் காப்பாற்ற முடியும் என பிரபல ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
‘டைட்டானிக்’, ‘தி ரெவனன்ட்’ உள்ளிட்ட புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களின் ஹீரோ லியானார்டோ டிகாப்ரியோவுக்கு உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர், பிபிசி செய்தித் தளத்தில் வெளிவந்த தமிழகத்தில் நிலவும் தண்ணீர் வறட்சி பற்றிய ஒரு செய்தியைக் குறிப்பிட்டு தனது கவலையைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பிபிசி செய்தித் தளத்தில் சென்னையில் நிலவும் குடிநீர் பஞ்சம் பற்றிய செய்தி வெளியாகியிருந்தது. சென்னையின் நீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகள் வறண்டதால் பெரும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அனுபவிக்கும் அன்றாட சிக்கல்களை முன்வைத்து அந்தச் செய்திக் கட்டுரையை வெளியிட்டிருந்தது பிபிசி.
இதைக் குறிப்பிட்டுள்ள லியானர்டோ, “மழையால் மட்டுமே சென்னையைக் காப்பாற்றமுடியும். தண்ணீர் தரும் கிணறுகள் முற்றிலுமாக வறண்டிருக்கின்றன. ஏரிகள் வறண்டுவிட்டன. இந்தியாவின் தெற்குகோடி நகரமான சென்னை கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளது.
குடிநீருக்காக மக்கள் காலி குடங்களுடன் அரசு தரும் தண்ணீருக்காக வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டின் காரணமாக அங்கு பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. சென்னை வாழ் மக்கள் மழைக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.” என அவர் பதிவு செய்துள்ளார்.
Also Read
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!